• May 10 2024

"உங்களுக்கு எப்போதுமே ஒரு நல்ல நண்பராக இருப்பேன்"…ஜெனிலியாவின் மனதை உருக்கும் பதிவு..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவில் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் எனப் பல மொழித் திரைப்படங்களிலும் நடித்து பிரபல்யமான ஒருவரே நடிகை ஜெனிலியா. இவரைத் தமிழ் சினிமாவில் இயக்குநர் சங்கர் தனது 'பாய்ஸ்' என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து விஜய், பரத், ஜெயம் ரவி ஆகிய முன்னணி நட்சத்திரங்கள் பலருடனும் இணைந்து படங்களில் நடித்துள்ளார்.

இவர் நடித்த படங்களிலே 'சந்தோஷ் சுப்பிரமணியம்' என்ற படம் நம் யாராலுமே மறக்க முடியாது. இப்படத்தில் ஹாசினியாக குதூகலம், குறும்புத்தனம் மிக்க பெண்ணாக நடித்து அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்தார். இவ்வாறாக கியூட்டான எக்ஸ்பிரஷன் கொடுத்து இளைஞர்கள் பலரது மனதையும் கொள்ளை அடித்திருக்கின்றார்.

சினிமாவில் அவரது மார்க்கெட் இருக்கும் வரை தொடர்ந்தும் பல பங்களில் நடித்து வந்தார். பின்னர் பாலிவுட் நடிகர் ரித்தேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட அவர் சினிமா பக்கமே வருவதில்லை. தற்போது அவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

இதனால் தற்போது படங்களை விடுத்து சமூக வலைத்தளங்களில் ஓய்வில்லாமல் இருக்கத் தொடங்கி விட்டார். அதிலும் குறிப்பாக இன்ஸ்டாவில் எப்போதுமே ஆக்டீவாக இருக்கும் அவர் நிறைய ரீல்ஸ் வீடியோ மற்றும் போட்டோக்களை வெளியிடுவார். இந்த நிலையில் இவர் தற்போதும் இரண்டு குழந்தைகளுடனும் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு வாழ்த்து தெரிவித்திருக்கின்றார்.

அதில் அவர் "நான் உங்களுக்கு ஒரு நல்ல அம்மாவாக இருப்பேன் எனவும், நான் உங்களுக்கு எந்தக்காலத்திலேயாவது எப்போதாவது தேவைப்பட்டால் கட்டாயம் அந்த இடத்தில் இருப்பேன், உங்களை சந்தோஷப்படுத்தும் நபராகவும், உங்களுக்கு ஒரு நல்ல நண்பராகவும் எப்போதுமே இருப்பேன், எங்க சந்தோசமே நீங்க தான், இந்த சாந்தோஷத்தை வீட்டிலே கொண்டு வந்தமைக்காக உங்களுக்கு நன்றி சொல்கிறேன்" எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இவரின் இந்தப் பதிவு பல ரசிகர்களின் மனதைக் கவர்ந்திருக்கின்றது. இதற்குப் பலரும் தங்களது வாழ்த்துக்களையும் ஆதரவினையும் தெரிவித்து வருகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement