• May 09 2024

கமல் செய்ததெல்லாம் ஒரு சாதனையா? ‘தக்லைஃப்’ படத்தை கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

Sivalingam / 1 week ago

Advertisement

Listen News!

‘தக்லைஃப்’ படத்திற்காக உலக நாயகன் கமல்ஹாசன் ஒரு பாடலை எழுதி இருப்பதாகவும் இந்த பாடலை எழுத அவர் எடுத்துக் கொண்டது இரண்டு மணி நேரம்தான் என்ற நிலையில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் ஆச்சரியமடைந்ததாகவும் கூறப்படும் செய்தியை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தக்லைஃப்’ படத்தின் படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் நடந்து வரும் நிலையில் கமல்ஹாசன், சிம்பு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்து வரும் நிலையில் சமீபத்தில் ஒரு பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட்டது என்றும் அந்த பாடலை கமல்ஹாசன் எழுதி இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பொதுவாக ஏஆர் ரஹ்மான் தான் கம்போஸ் செய்யும் டியூனுக்கு பாடலை எழுதுபவர்களுக்கு அதிக நேரம் கொடுப்பார் என்றும் ஐந்து முதல் ஏழு மணி நேரம் வரை ஒரு பாடலை எழுத பாடலாசிரியர்கள் காலம் எடுத்துக் கொள்வார்கள் என்று கூறப்பட்டது.

ஆனால் கமல்ஹாசன், ஏஆர் ரஹ்மான் கம்போஸ் செய்த டியூனுக்கு ஏற்றவாறு இரண்டு மணி நேரத்தில் பாடலை எழுதிக் கொடுத்ததை கண்டு ஏஆர் ரஹ்மான் ஆச்சரியப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்த செய்தி இணையதளத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் ’அந்த காலத்தில் கண்ணதாசன் ஐந்து நிமிடத்தில் ஒரு பாடலை எழுதி விடுவார், இரண்டு மணி நேரத்தில் ஒரு பாடலை எழுதியது எல்லாம் ஒரு பெரிய சாதனையாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிவித்து வருகின்றனர்.

அதேபோல் இசைஞானி இளையராஜா ஒரு பாடலை ஐந்தே நிமிடத்தில் டியூன் போட்டு ஒரு மணி நேரத்தில் ரிக்கார்டிங் செய்ததெல்லாம் சாதனையாக இருக்கிறது, இந்நிலையில் ஒரு பாடலுக்கு இத்தனை மணி நேரம் எடுத்துக் கொண்டதையும் ஒரு சாதனையாக சொல்கிறார்களே என்ற கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகிறது.

Advertisement

Advertisement

Advertisement