• Sep 20 2024

மேடையிலே கண் கலங்கிய அருண்ராஜா- பட விழாவில் நேர்ந்த சோகம்.!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர், பாடலாசிரியர், பாடகர் என பன்முக திறமை கொண்டவர் தான் அருண்ராஜா காமராஜ்.மேலும் இவர் “கனா” படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அவரின் நண்பரான நடிகர் சிவகார்த்திகேயன் இந்தப்படத்தை தயாரித்திருந்தார். ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் நடிப்பில் வெளியான இந்த படம் பெண்கள் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து உருவாகி இருந்தது.

வசூல் மற்றும் விமர்சனரீதியாக நல்ல வரவேற்பை பெற இந்தப்படத்தை தொடர்ந்து அருண்ராஜா காமராஜின் இரண்டாவது படம் குறித்த எதிர்பார்ப்பில் இருந்தார்கள் ரசிகர்கள். அதன்படி, ஹிந்தியில் ஹிட்டடித்த 'ஆர்டிகள் 15' படத்தை தமிழில் ரீமேக் செய்து வருகின்றார். உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் இந்த படத்தை ஜீ5 ஸ்டுடியோஸ் சார்பில் போனி கபூர் தயாரித்துள்ளார்.

மேலும் அண்மையில் இந்தப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் படத்தின் 'நெஞ்சுக்கு நீதி' டைட்டில் வெளியாகி ரசிகர்களிடத்தே வைரலானது. கலைஞரின் பிரபலமான நூலின் பெயரை படத்தின் தலைப்பாக்கியுள்ளது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது என்று தான் கூற வேண்டும். இந்நிலையில் இந்தப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்றது.

இவ்விழாவில் பேசிய சிவகார்த்திகேயன், படத்தின் டைரக்டர் அருண்ராஜா காமராஜின் மனைவி சிந்து பற்றி பேசினார். அப்போது மேடையிலேயே கண்கலங்கி அழுதார் அருண்ராஜா காமராஜ். அதன்பின்னர் பேச வந்த அருண், தனது உதவி இயக்குநர்களுடன் புகைப்படம் எடுத்து கொள்கிறேன் என்றார். அதனை தொடர்ந்து பேச முடியாமல், கண் கலங்கினார் அருண்ராஜா காமராஜ்.

மேலும் அவரின் மனைவி சிந்து, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 2 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்தார். இந்த சம்பவம் திரைத்துறையிலும், ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மனைவி இறந்த பின்னர் சோஷியல் மீடியா பக்கங்களில் தனது மனைவியின் பிறந்தநாள், கல்யாண நாளில் உருக்கமான பதிவுகள் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் 'நெஞ்சுக்கு நீதி' பட விழாவில் மனைவியை நினைத்து அருண்ராஜா கண் கலங்க்கியுள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

https://www.youtube.com/embed/3mI2KccPi4w

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement