• Jul 27 2024

7 வருடங்களாக முடங்கியிருக்கும் படத்தை மீண்டும் தூசு தட்டும் அமீர்.. நடிகை வெளியிட்ட தகவல்..!

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

7 ஆண்டுகளாக முடங்கி இருக்கும் திரைப்படத்தை மீண்டும் தூசு தட்ட இயக்குனர் அமீர் திட்டமிட்டுள்ளதாக அந்த படத்தில் நடித்த நடிகை ஒருவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரை உலகின் திறமையான இயக்குனர்களில் ஒருவரான அமீர்மௌனம் பேசியதேஎன்ற படத்தின் மூலம் இயக்குனர் ஆனார் என்பதும் அதன் பிறகுராம்’ ’பருத்திவீரன்’ ’ஆதி பகவன்உள்ளிட்ட படங்களை இயக்கிய அவர் கடந்த 2017 ஆம் ஆண்டுசந்தனத்தேவன்என்ற படத்தை இயக்கினார்

இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட ஐம்பது சதவீதம் முடிவடைந்த நிலையில் திடீரென அந்த படத்தை அவர் பாதியில் நிறுத்தி விட்டதாக கூறப்பட்டது. ஆர்யா மற்றும் அவருடைய சகோதரர் சத்யா ஆகிய இருவரும் இணைந்து நடித்த இந்த படத்தை தற்போது ஏழு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அமீர் தூசி தட்டி இருப்பதாகவும் விரைவில் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.



இந்த படத்தில் இந்த படத்தில் மூன்று நாயகிகள் நடித்துக் கொண்டிருந்த நிலையில் அவர்களில் ஒருவர்ஜெயிலர்படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்த மிர்ணா என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில்சந்தனத்தேவன்என்ற படம் கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கிய நிலையில் அந்த படத்தை மீண்டும் இயக்க அமீர் திட்டமிட்டுள்ளதாகவும் அதற்காக சம்பந்தப்பட்ட நடிகர்களிடம் கால்ஷீட் கேட்டு வருவதாகவும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறியுள்ளார்.

இந்த ஆண்டு இறுதியில்சந்தனத்தேவன்படத்தை வெளியிட அமீர் திட்டமிட்டுள்ளதாகவும் ரசிகர்களுக்கு இன்னொரு மிகப்பெரிய விருந்து காத்திருக்கிறது என்றும் கூறினார். ’சந்தனத்தேவன்திரைப்படம் ஜல்லிக்கட்டு கதையம்சம் கொண்டது என்றும் இதில் ஜல்லிக்கட்டு வீரராக ஆர்யா நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement