• May 20 2024

ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன அஜய் கிருஷ்ணா-வைரலாகும் புகைப்படங்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் தமது பயணத்தை தொடங்கிய பலர் இன்று வெள்ளித்திரையில் ஜொலித்துக் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சியில் பாடிய பலரும் இன்று இளையராஜா, ஏ.ஆர் ரகுமான் ஆகியோரின் குழு இசையில் பாடத் தொடங்கி தற்போது தனியாக பாடல் பாடும் அளவிற்கு உயர்ந்துள்ளனர். 

மேலும் பலர் சில படங்களிலும், ஆல்பங்களிலும் பாடி வருகின்றனர். அப்படி எளிய பின்னணியில் இருந்து வந்து புகழை அடைந்துள்ள ஒருவர்தான் அஜய் கிருஷ்ணா. சூப்பர் சிங்கரில் ஒரு போட்டியாளாரக கலந்து கொண்டார். எனினும் சமீபத்தில் திருமணம் முடிந்த அவரின் மனைவி கர்ப்பமாக இருப்பதை instagram பக்கத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்து இருக்கிறார்.



சூப்பர் சிங்கரில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டவர் அஜய் கிருஷ்ணா. இவருக்கு ஒரு தனித் திறமை உண்டு. பேசுவதில் மிமிக்ரி செய்ய முடியும், ஆனால் பாடுவதை மிமிக்ரி செய்வது சிறிது கஷ்டமான காரியம் என்று தான் கூற வேண்டும்.ஆனால் அஜய் கிருஷ்ணாவோ பிரபல பாடகர் உதித் நாராயணன் போலவே பல பாடல்களை பாடி மிமிக்ரி செய்துள்ளார்.



ஒருமுறை எஸ்பிபி இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்த போது எஸ்பிபியின் பாட்டை உதித் நாராயணன் பாடியிருந்தால் எப்படி இருக்கும் என்று பாடி காட்டினார். எனினும் அதை கேட்ட எஸ்பிபி ஆச்சரியத்தில் உறைந்து போய்விட்டார். நான் உதித்தை மீண்டும் ஒருமுறை சந்தித்தால் உன்னை மிமிக்ரி செய்யும் ஒருவன் சென்னையில் இருக்கிறான் என்று கூறுவேன் என அஜயிடம் எஸ்பிபி சொல்லியிருந்தார்.



மேலும் அந்த அளவிற்கு திறமையான ஒரு பாடகர் அஜய் கிருஷ்ணா. பின்னர் இவர் ஸ்டார் மியூசிக் என்னும் நிகழ்ச்சியில் பாடிக்கொண்டிருந்தார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு பிறகு சில நிகழ்ச்சிகளில் பிசியாக இருந்து வருகிறார். இந்த நிலையில் அஜய் கிருஷ்ணா கடந்த மே மாதம் ஜெசி என்பவரைதிருமணம் செய்து கொண்டார். 



திருமணமாகி 5 மாதங்கள் முடிந்த நிலையில் தற்போது தனது மனைவி கர்ப்பமாக இருக்கும் செய்தியை அவர் instagram-யில் பகிர்ந்து இருக்கிறார். இன்று அஜயின் பிறந்தநாள் என்பதால் அவருக்கு இந்த பரிசை அளிப்பதாக அஜயின் மனைவி ஜெஸ்ஸி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அத்தோடு அஜய் மற்றும் ஜெசி தம்பதிகளுக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர்.





Advertisement

Advertisement