அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.வில்லனாக பஃகத் பாசில் நடித்திருந்தார்.
பான் இந்தியா படமாக வெளியாகி 5 மொழிகளிலும் சக்கைப்போடு போட்ட இப்படம் ரூ.350 கோடிக்கு மேல் வசூலித்தது.இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என்று ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது. மேலும் புஷ்பா படத்தின் வெற்றிக்கு அப்படத்தில் இடம் பெற்ற ஐட்டம் சாங்கும் ஒரு முக்கிய காரணம்.
அதில் சமந்தா மிகவும் கவர்ச்சியாக நடனம் ஆடியதால், இப்பாடலுக்காகவே படத்தை பார்த்தவர்கள் ஏராளம்.முதல் பாகத்தை விட மிகவும் பிரம்மாண்டமாக பாகம் இரண்டை எடுக்க முடிவெடுத்துள்ளனர். முதல்பாகத்தின் வெற்றிக்கு காரணமாக இருந்த ஐட்டம் சாங்கைப் போல் இரண்டாம் பாகத்திலும் ஒரு ஐட்டம் சாங் வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
இதில் சமந்தா ஆட மறுத்துவிட்டதால், பின்னர் பாலிவுட் நடிகை மலைகா அரோரா ஆட உள்ளதாக கூறப்பட்டது.ஆனால் தற்போது புது வ நடிகை தமன்னா ஆடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே பல்வேறு படங்களில் ஐட்டம் டான்ஸ் ஆடியுள்ள தமன்னாவை இப்படத்தில் மிகவும் கவர்ச்சியாக ஆடவைக்க திட்டமிட்டு, படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!