• May 21 2024

6 வருஷம் தேடியும் பொண்ணு கிடைக்கல- கடைசியில் அம்மா சொன்ன வார்த்தையால் கடுப்பான கார்த்தி

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களில் முக்கியமானவர் தான் கார்த்தி.இவர் அமீர் இயக்கத்தில் கடந்த 2007-ம் ஆண்டு ரிலீசான பருத்திவீரன் படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அவர் நடித்த முதல் படமே பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதோடு, தேசிய விருதையும் வென்றது.

இதனை அடுத்து நடிப்பில் அதிக ஆர்வம் செலுத்த ஆரம்பித்த இவர் தொடர்ந்து பையா, ஆயிரத்தில் ஒருவன், நான் மகான் அல்ல, தீரன் அதிகாரம் ஒன்று, சிறுத்தை என தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்தார்.

இவர் நடித்த படங்களும் அடுத்தடுத்து ஹிட் ஆனதால் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார்.தற்பொழுது இவரது கையில் பொன்னியின் செல்வன், விருமன், சர்தார் ஆகிய படங்கள் உள்ளன. இதில் விருமன் படம் வருகிற ஆகஸ்ட் 11-ந் தேதியும், பொன்னியின் செல்வன் படம் செப்டம்பர் 30-ந் தேதி, சர்தார் படம் அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகைக்கும் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், நடிகர் கார்த்தி தான் காதலிக்காதது ஏன் என்பது குறித்து பேட்டி ஒன்றில் மனம்விட்டு பேசியுள்ளார். அதன்படி தனது அண்ணன் சூர்யா, ஜோதிகாவை காதலித்து கல்யாணம் பண்ணியதால், லவ் எதுவும் பண்ணிடாத டானு அம்மா சொல்லிட்டே இருப்பாங்க. அதனாலயே காதல் என்பது என் வாழ்க்கையில் இல்லாமலே போய்விட்டது.

சரி வீட்டில் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்யலாம் என்றால், யாரும் பொண்ணு தரல. 6 வருஷம் தேடியும் பொண்ணு கிடைக்கல. ஒரு கட்டத்துல அம்மாவே என்கிட்ட வந்து யாரையாவது லவ் பண்ணா சொல்லு.. கல்யாணம் பண்னி வைக்கிறேன்னு சொன்னாங்க. அதை இப்போ சொன்னா எப்படினு சொல்லி வீட்டில் பார்த்த பெண்ணையே கல்யாணம் பண்ணிக்கொண்டதாக கூறியுள்ளார்

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement