• Sep 20 2024

நீங்க என் அம்மா இல்லை... ராதிகாவின் மூன்றாவது கணவர் மகளின் பதிவு..என்ன சொல்லியுள்ளார் தெரியுமா..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

நடிகை ராதிகா இன்று தன்னுடைய 60-ஆவது பிறந்தநாளை மிக பிரமாண்டமாக கொண்டாடி வருகிறார். அதற்கு அவரது திரையுலகின்ர் முதல் உறவுகள் வரை வாழ்த்து கூறியிருந்தனர்.

இவ்வாறு இருக்கையில் ராதிகாவின் மூன்றாவது கணவரான சரத்குமாரின் மகள் வரலட்சுமி ராதிகாவிற்கு வாழ்த்து கூறியது ரசிகர் மத்தியில் பேசுபொருளாக அமைந்துள்ளது.

அதாவது நடிகை ராதிகா கடந்த 2005ஆம் ஆண்டு நடிகர் சரத்குமாரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார். சரத்குமாருக்கு முன், நடிகை ராதிகா இரு திருமணம் செய்துள்ளார் என்பதும், அந்த இரு திருமணமும் விவாகரத்தில் முடிந்துவிட்டது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

நடிகர் சரத்குமார் தனது முதல் மனைவி சாயாவை விவாகரத்து செய்த பின் தான் ராதிகாவை திருமணம் செய்துகொண்டார். இதனால், சரத்குமாரின் முதல் மனைவிக்கு பிறந்த நடிகை வரலட்சுமி சரத்குமார், ராதிகா தனது அம்மா இல்லை ஆன்ட்டி தான் என்று பேட்டிகளில் கூறியிருந்தார்.



இந்நிலையில், இன்று 60வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகை ராதிகாவை வாழ்த்தும் விதமாக அவருடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவு செய்து வாழ்த்து தெரிவித்துள்ளார் வரலட்சுமி. அந்த வாழ்த்தில் ராதிகா ஆன்ட்டி என்று குறிப்பிட்டுள்ளார். இவருடைய பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

அதாவது அவர் தனக்கு அம்மா இல்லை ஆண்டி தான் என மறுபடியும் நிரூபித்துள்ளார்.இதோ அந்த பதிவு..



Advertisement

Advertisement