தமிழ் சினிமாவில் 80களில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வந்தவர் தான் மோகன். இவர் நடித்த அனைத்து திரைப்படங்கம் ரசிகர்களின் பேராதரவைப் பெற்றிருக்கின்றன. இந்த நிலையில் தற்பொழுது இவர் வெள்ளித் திரைக்கு வந்து 45 ஆண்டுகள் நிறைவு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வில் பங்குபற்றிய மோகன் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பொன்னியின் செல்வன் படத்தில் சோழர்கள் இந்துவாகக் காட்டப்பட்டதாக வெற்றிமாறன் வர்ச்சைக் கருத்தை வைத்தார். இது பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதில் கூறிய மோகன் உங்க கேள்வி நல்லா இருக்கு இதை எதுக்கு இங்க பேசணும் தனியா வாங்களேன் பேசுவோம் எதுக்கு இதை எங்க பேசிறீங்க என்று கோபத்துடன் கூறியிருந்தார். மேலும் இஸ்லாமியர்கள் புறக்கணிப்பதில்லை. நான் எல்லா மதத்தையும் அனுசரிச்சு போவேன். ஒரு மதத்திற்கும் விரோதமாக நான் நடிக்கவில்லை என்று கூறினார்.
இது தவிர தனது முதல் படம் பற்றியும் கூறியிருந்தார்.மேலும் உங்களை மைக் மோகன் என்று சொல்லுறறாங்களே அதுக்கு என்ன காரணமாக இருக்கும் என்று கேட்ட போது நான் ஒரு சில படங்களில் தான் பாடகனாக நடித்திருக்கின்றேன். அப்படங்களில் இடம் பெற்ற பாடல்கள் தான் என்னை உங்களிடம் கொண்டு வந்து சேர்த்திருக்கு இதற்கு அப்படத்தின் இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு தான் நன்றியை தெரிவிக்கின்றேன் எனத் தெரிவித்திருந்தார் என்பதும் முக்கியமாகும்.
Listen News!