விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகள் எவ்வளவு ஒளிபரப்பாகிறதோ அதே அளவிற்கு சீரியல்களும் ஒளிபரப்பாகின்றன. அப்படி ரசிகர்களால் கொண்டாடப்படும் தொடர்களில் ஒன்று கண்ணே கலைமானே.
இந்த தொடரில் நாயகனாக நடன இயக்குநர் நந்தா அவர்கள் நடித்து வந்தார்.
ஆனால் திடீரென அவருக்கு பதிலாக தமிழும் சரஸ்வதியும் சீரியல் நவீன் ராமாக நடிக்க இருக்கிறார் என தகவல்கள் வந்தன.
காரணம் என்னவென்றால் நந்தாவிற்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாம், நடக்கவே முடியாத நிலையில் உள்ளாராம். தனது காலை போட்டோ எடுத்து இன்ஸ்டாவில் பதிவிட்டு இந்த தகவலை ரசிகர்களுக்கு கூறியுள்ளார் இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Listen News!