• Oct 22 2024

யாருடைய உதவியுமின்றி ஓவர் தெனாவெட்டு காட்டும் பாக்கியா? எழிலுக்கு வேதனை

Aathira / 1 day ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், பாக்கியா ரெஸ்டாரன்ட் பிரச்சனையை முடிப்பதற்காக தன்னிடம் உள்ள நகைகளை எல்லாம் எடுத்து வைக்கின்றார். அதன் பின்பு ஈஸ்வரிடம் சென்று தன்னிடம் இருக்கும் நகைகளையும் நீங்க தந்த நகைகளையும் சேர்த்து அடகு வைக்கப் போகின்றேன் என்ற விடயத்தை சொல்லுகின்றார்.

இதன்போது ஈஸ்வரி தன்னிடமும் கொஞ்ச நகைகள் இருக்குது அதையும் நீ வைத்துக்கொள் என்று எடுத்துக் கொடுக்க, இது எல்லாம் வேண்டாம் என்று பாக்கியா தடுக்கின்றார். ஆனால் ஈஸ்வரி கட்டாயப்படுத்தி கொடுத்ததோடு தன்னுடைய தாலியையும் எடுத்து கொடுக்கின்றார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாக்யா, தன்னுடைய தாலியை எடுத்து இது இருக்கிறதால என்ன பிரயோஜனம் என்று தெரியவில்லை. ஆனால் உங்களுக்கு மாமா தாலி கட்டும் போது கொடுத்த வாக்குறுதிகளை கடைசி மட்டும் காப்பாற்றி இருக்கின்றார். அதற்கு நீங்கள் மரியாதை கொடுக்கணும் என்று சொல்லி ஈஸ்வரி கொடுத்த நகைகளை திருப்பி அவரிடமே கொடுத்து விட்டு செல்கிறார்.


இதைத்தொடர்ந்து பாக்கியாவின் வீட்டிற்கு பழனிச்சாமி வருகின்றார். அவர் இந்த பிரச்சனையை முடிப்பதற்கு காசு தருவதாக சொல்லவும் பாக்கியா வேண்டாம் தானே பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லுகின்றார். 

இறுதியாக பாக்கியாவும் எழிலும் பேங்குக்கு போய் நகைகளை அடகு வைக்கின்றார்கள். இதன் போது தன்னால் எதுவுமே செய்ய முடியவில்லை என்று எழில் அழுகின்றார் ஆனாலும் பாக்கியா அவருக்கு நம்பிக்கை கொடுக்கின்றார். இது தான் இன்றைய எபிசோட்.

Advertisement