• May 20 2024

செழியன் கூட பேசாமல் ஜெனி செய்த காரியம்- செம குஷியில் இருக்கும் இனியா- கோபிக்கு ராதிகா கொடுத்த ஷாக்-Baakiyalakshmi Serial

stella / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

ஜெனிக்கு வளைகாப்பு முடிவடைந்த தன்னுடைய அம்மா வீட்டுக்கு போவதற்காக ரெடி ஆகின்றார். இதனால் எல்லோரிடமும் தான் சென்று வருவதாக கூறுகின்றார். மேலும் தனது அம்மாவிடம் நான் வரல இங்கையே இருந்து கொள்ளட்டுமா என்று கேட்க, ஈஸ்வரி பாக்கியா எல்லோரும் சமாதானம் செய்து அனுப்பி வைக்கின்றனர்.


தொடர்ந்து பாக்கியாவும் ஈஸ்வரியும் ராமமூர்த்தியும் இருந்த பேசிட்டு இருக்கும் போது செல்வியும் வந்து பேசிக் கொண்டிருக்கின்றார். அப்போது ஜெனி வந்து நாளைக்கு நான் ட்ரிப்புக்கு போறதுக்கு எல்லாம் எடுத்து வைச்சிட்டேன். நீ வந்து பாரும்மா என்று பாக்கியாவிடம் சொல்கின்றார். அத்தோடு எல்லார் கூடையும் ட்ரிப் போயிருக்கிறேன்.

முதன் முறையாக எனக்காக ட்ரிப் போகப்போறேன் என்று நினைக்கும் போது ரொம்ப சந்தோஷமாக இருக்கு என்று சொல்கின்றார். மறுபுறம் ஜெனி வீட்டுக்கு போனதை நினைத்து செழியன் மொட்டை மாடியில் நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருக்கின்றார். அப்போது எழில் போய் அவங்க போன் பண்ணும் மட்டும் நீ ஏன் வெயிட் பண்ணுற நீ போனெடுத்து பேசு என்று சொல்கின்றார்.


இதனால் செழியன் போன் பண்ணப்போக மாலினி போன் பண்ணி பேசுகின்றார். இதனால் மாலினியும் செழியன் பேசுகின்றார். பின்பு மறுபடியும் செழியன் ஜெனிக்கு போன் பண்ணும் போது ஜெனி அமிர்தாவுக்கு வீடியோ கோல் பண்ணி எல்லோர் கூடவும் பேசிக் கொண்டிருக்கின்றார். இதனால் செழியன் நிறைய தரம் போன் பண்ணி இருக்கிறான் என்பதைப் பார்த்த ஜெனி செழியனுக்கு திரும்ப போன் பண்ண அவரது அம்மா ஜெனி போனை வச்சிட்டு உள்ளே வா என்று கூட்டிட்டு போகின்றார். 

ஜெனி போன் எடுக்காததால் செழியன் குழப்பத்தில் இருக்கின்றார்.மேலும் கோபி வீட்டில் ராதிகா பங்சனை சின்னதா முடிச்சிட்டாங்க என்று சொல்ல,கோபி சின்னதாக இருந்தாலும் நல்லாத் தானே இருந்திச்சு என் சொல்ல ராதிகா ரொம்ப சூப்பராகப் பண்ணியிருந்தாங்க என்று சொல்கின்றார்.


அப்போது ராதிகாவின் அம்மா வந்து மயூ பெரிய பொண்ணாகிட்டா என்று சொல்ல ராதிகாவும் கோபியும் சந்தோஷப்படுகின்றனர். அப்போது ராதிகா நாளைக்கு பங்சன் வைச்சுக்கலாம் என்று சொல்ல கோபி தான் நாளைக்கு இனியா கூட போறேன் என்று சொல்கின்றார். இதைக் கேட்ட ராதிகா திட்டுகின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.


Advertisement

Advertisement