• Apr 26 2024

வாரிசு, துணிவு சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி இல்லை- கடைசி நேரத்தில் தமிழ் நாட்டு அரசு போட்ட தடை உத்தரவு

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு படங்கள் நாளை வெளியாக உள்ளன. அஜித்தின் துணிவு படம் அதிகாலை 1 மணிக்கு வெளியாகிறது. விஜய்யின் வாரிசு திரைப்படம் அதிகாலை 4 மணிக்கு வெளியாகிறது. ஜனவரி 11ம் தேதி முதல் 17ம் தேதி வரை சிறப்பு காட்சிகளை வெளியிட இரண்டு படக்குழுவும் முடிவு செய்திருந்தது.

இரண்டு பெரிய ஹீரோக்களில் படங்கள் ரிலீஸ் அவதால் ரசிகர்கள் மத்தியில் பிரச்சனை வர கூடாது என்பதற்காக தியேட்டர்கள் சரிபாதி இரண்டுக்கும் வழங்கப்பட்டு இருக்கிறது.இந்நிலையில், விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு படங்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13, 14, 15 மற்றும் 16ம் தேதி சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.


மேலும், திரையரங்குகளில் உள்ள விஜய், அஜித் படங்களின் பேனர்கள் அகற்றப்பட வேண்டும் என்றும் பேனர்கள் வைத்து பாலாபிஷேகம் செய்யக் கூடாது என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.முதல் நாள் காட்சியில் பாலாபிஷேகம் செய்வதற்காக பால் வண்டிகளில் இருந்து பால் திருடும் நிலை உருவாகலாம் என்பதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி அதிக டிக்கெட் விற்பனை செய்வதாக புகார் எழுந்தால் வாரிசு மற்றும் துணிவு படக்குழுக்கள் பெரும் சிக்கலை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அதனால் காலை 4 மற்றும் 5 மணிக்கு சிறப்பு காட்சிகள் அந்த நாட்களில் போட முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது. இதனால் இரண்டு படங்களுக்கும் பண்டிகை நாட்களில் வசூல் இழப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.




Advertisement

Advertisement

Advertisement