• Sep 20 2024

பழனிச்சாமியால் குடும்பத்திற்கு காத்திருந்த அதிர்ச்சி... பாக்கியா பேசியதைக் கேட்டு சுவரில் தலையை இடித்த கோபி... 'பாக்கியலட்சுமி' இன்றைய எபிசோட்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடைபெறவுள்ளது என்று குறித்து பார்ப்போம்.

அந்தவகையில் பழனிச்சாமியின் அம்மா மற்றும் பாக்கியாவின் குடும்பத்தார் எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து பேசிக்கொண்டு இருக்கின்றனர். அதாவது "பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப நல்லவங்களா இருக்காங்க இந்த வரன் நல்லபடியா அமைந்தாளல் அடுத்த மாசமே இந்தக் கல்யாணத்த நாங்க வச்சுக்கலாம்" எனக் கூறுகின்றனர்.


மறுபுறம் பழனிச்சாமியும் சந்திராவும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அந்தசமயத்தில் சந்திரா "உங்க அம்மாவையும் நான்தான் பார்த்துக்கணுமா" என கேள்வி கேட்க உடனே பழனிச்சாமியின் முகம் சுருக்கென்று மாறுகிறது.

அதன் பிறகு சிறிது நேரம் கழித்து பெண் வீட்டார் அனைவரும் அங்கிருந்து கிளம்பி சென்றதும் பழனிச்சாமி இந்த கல்யாணம் வேண்டாம் என்று கூறுகின்றார். இதனை கேட்டதும் எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர். அதாவது "அந்த பொண்ணு கொஞ்சம் படிச்ச மாப்பிள்ளையை எதிர்பார்க்குது" என பழனிச்சாமி சொல்ல, அதற்கு பாக்கியா "பொண்ணுங்க படிச்சவங்க எல்லாம் எதிர்பார்க்க மாட்டாங்க, நல்லபடியா பாத்துக்கிட்டா போதும்னு மட்டும் தான் நினைப்பாங்க" என்கிறார்.


ஆனாலும் விடாப்பிடியாக இருக்கும் பழனிச்சாமி "இந்த கல்யாணம் செட் ஆகாது வேண்டாம்" என மன்னிப்பு கேட்கிறார். இதனையடுத்து ராமமூர்த்தி "சரி விடுங்க இந்த பொண்ணு இல்லனா இன்னொரு பொண்ணு" என சொல்கிறார். அதற்கு ஈஸ்வரியும் "ஆமா நிறைய சொந்தக்காரர் பொண்ணு இருக்காங்க பார்க்கலாம் என்கிறார்.

மறுபுறம் கோபி காரை ரொம்பவும் வேகமாக ஓட்டி வர மெதுவா போங்க என ராதிகா சொல்கிறார். பின்னர் மயூ போகும்போது பீச்சுக்கு போகலாம் என்று சொல்ல கோபி வீட்டுக்கு போகலாம் புயல் மழை வரப்போகுது என சொல்லி சமாளித்து அவர்களை அழைத்துச் செல்கிறார்.


அதற்கு ராதிகா "நாங்க எங்க வீட்டுக்கு போயிட்டு அம்மாவை பாத்துட்டு வரோம்" என்று சொல்ல கோபியும் உடனே சரியென சொல்கிறார். ஆனால் ராதிகா கோபியையும் வருமாறு கூப்பிட அதற்கு கோபி "எனக்கு டயர்டா இருக்கு நான் போய் ரெஸ்ட் எடுக்கிறேன், நீங்க அம்மாவை பாத்துட்டு பொறுமையா வாங்க" என்கிறார்.

இதனை கேட்டதும்  ராதிகா "நான் அங்கேயே இருந்தா கூட உங்களுக்கு சந்தோஷம் தானே" என்கிறார். அதற்கு கோபி "அதுல என்ன சந்தேகம் ரொம்ப சந்தோஷம்" என உளறுகிறார். இதனையடுத்து ராதிகா கோபியுடன் சண்டை போடுகிறார். உடனே கோபி சமாளித்துக் கொண்டு "நான், நீ, மயூ என எல்லோரும் அந்த வீட்ல இருந்தா யாருக்கும் எந்த பிரச்சினையும் இல்ல அதுதான் சொன்னேன்" என்கிறார்.

மறுபுறம் பழனிச்சாமி வீட்டில் இருந்து கிளம்புவதாக சொல்லி வெளியே வர அவரது அம்மா பையை உள்ளவே வச்சிட்டேன் எனக் கூறி திரும்பவும் வீட்டின் உள்ளே செல்கிறார். அந்த சமயத்தில் தனியாக இருக்கும் பாக்கியாவும் பழனிச்சாமியும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது பாக்கியா "கல்யாணம் பண்ணிக்கிட்டா தான் நமக்குன்னு ஒரு குடும்பம் வாரிசு எல்லாம் வரும்" என பழனிச்சாமியிடம் கூறுகின்றார்.


அந்த சமயத்தில் வெளியில் இருந்து வீட்டுக்கு வரும் கோபி இதை கேட்டு சுவரிலேயே இடித்துக் கொள்கிறார். பின்பு "நீங்க சொல்லித்தான் நான் பொண்ணு பார்க்க வந்தேன்" என பழனிச்சாமி பாக்கியாவிடம் சொல்ல இப்பவும் நான் சொல்றேன் கல்யாணம் பண்ணிக்கோங்க என்று சொல்ல கோபி அதற்கும் வாயில் அடித்துக் கொள்கிறார்.


இதனைத் தொடர்ந்து உள்ளே செல்லும் கோபியை தடுத்து நிறுத்தும் பழனிச்சாமி எப்படி இருக்கீங்க என ஆங்கிலத்தில் தவறாக கேட்க கோபி புரியாமல் தாறுமாறாக முழிக்க பிறகு பழனிச்சாமி பாக்கியாவின் அருகே சென்று என்னை ஞாபகம் இருக்கான்னு எப்படி கேட்கணும் என கேட்க இருவரும் நெருக்கமாக இருப்பதை பார்த்து கோபி மீண்டும் பயங்கர கோபத்தில் இருக்கின்றார்.

இவ்வாறாக இன்றைய எபிசோட் அமைந்துள்ளது.

Advertisement

Advertisement