• Sep 20 2024

திடீரென முடிவிற்கு வரும் 'ராஜா ராணி 2'... கதையின் கிளைமாக்ஸ் இதுதானாம்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று 'ராஜா ராணி 2'.  இந்த சீரியலின் உடைய முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து 2ஆவது சீசனும் ஒளிபரப்பாக இருந்தது. 

இந்த இரண்டாவது சீசன் ஆனது ஆலியா மானசா நடிக்கும் போது ரசிகர்கள் மத்தியில் ஓரளவுக்கு வரவேற்பை பெற்ற நிலையில் அவர் இந்த சீரியலை விட்டு வெளியேற வலுவிழந்தது. இதனையடுத்து ரியா விஸ்வநாதன் கமிட்டானார். 


இருப்பினும் எதிர்பாராத விதமாக அவரும் திடீரென சீரியலை விட்டு வெளியேறினார். இந்த நிலையும் தற்போது சந்தியா கதாபாத்திரத்தில் ஆஷா கவுடா என்பவர் நடித்து வருகிறார். எது எவ்வாறாயினும் சீரியலின் கதை ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து எதிர்மறை கருத்துக்களை பெற்ற வண்ணம் இருக்கின்றது.


இதன் காரணமாக இந்த சீரியலை முடிவுக்கு கொண்டு வர உள்ளது விஜய் டிவி. அந்தவகையில் விக்கி கொலை வழக்கை சந்தியா விசாரித்து வரும் நிலையில் கொலையாளி யார் என்பதை கண்டுபிடித்த உடன் இந்த சீரியல் முடிவுக்கு வரும் என கூறப்படுகின்றது. அதுமட்டுமல்லாது கிளைமேக்ஸ் காட்சியில் விக்கியை கொலை செய்த குற்றத்திற்காக சிவகாமி ஜெயிலுக்குப் போவார் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் எது எப்படியோ எங்களுக்கு சீரியலை முடிச்சா போதும் எனக் கூறி கலாய்த்து வருகின்றனர்.

Advertisement

Advertisement