• Sep 19 2024

கோலங்கள் சீரியலில் தேவயாணிக்கு பதிலாக முதல் நடிக்க இருந்தது இந்த நடிகை தனாம்-அட இவரா..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் தொலைக்காட்சி வரலாற்றிலேயே 1,000 எபிசோட்களை கடந்த முதல் தொடர் சன் டிவியில் ஒளிபரப்பான 'கோலங்கள்' சீரியல் ஆகும்.

மேலும் இது கடந்த 2003 ஆம் ஆண்டு 24 நவம்பர் ஆம் தேதி முதல் 2009 ஆம் ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி வரை மொத்தம் 1,533 எபிசோட்களுடன் நிறைவடைந்த இந்த ப்ரைம் டைம் சீரியலுக்கு இன்றுவரை ஏராளமான ரசிகர்கள் உண்டு.

அந்த அளவிற்கு தமிழ் மக்களால், டிவி சீரியல் ரசிகர்கள் விரும்பப்பட்ட இந்த தொடரில் தேவயானி, தீபா வெங்கட், திருச்செல்வம், அஜய் கபூர், பூர்ணிமா இந்திரஜித், மோகன் ஷர்மா, சத்ய பிரியா, அபிஷேக் சங்கர், சுபலேகா சுதாகர், நளினி, வனிதா கிருஷ்ணச்சந்திரன், ஸ்ரீவித்யா மோகன், மஞ்சரி வினோதினி, குயிலி, பாம்பே ஞானம், துவாரகிஷ் ஜிரி என ஒரு நடிகர் - நடிகையர் என பல முக்கிய நடிகர்கள் நடித்து உள்ளனர்.

மேலும் கோலங்கள் சீரியலில் நடித்ததற்காக நடிகை தேவயானிக்கு 2003 ஆம் ஆண்டு மற்றும் 2004 ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகை என்கிற விருதுகளும், உடன் நடித்த தீபா வெங்கட்டுக்கு 2005 ஆம் ஆண்டுக்கான சிறந்த தோழிக்கான விருதும் மற்றும் அஜய் கபூர் 2010 ஆம் ஆண்டுக்கான சிறந்த வில்லனுக்கான விருதும் வென்று குவித்தனர்.

இந்நிலையில் இந்த சீரியல் பற்றி தற்போது ஒரு தகவல் வெளியாகி உள்ளது.இந்த தொடரில் மெயின் ரோலில் முதலில் நடிக்க இருந்தது நடிகை சௌந்தர்யாவாம். தவிர்க்க முடியாத காரணத்தினால் அவர் நடிக்காமல் போக அதற்கு பதிலாக தேவயானி நடித்தாராம் என தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement

Advertisement