• May 21 2024

"என்னைக் குறிவைத்து தாக்குகின்றார்கள், யாராவது என்னைக் காப்பாற்றுங்கள்"…மனதை உருக்கும் பிரபல நடிகையின் பதிவு

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிகளில் நடித்துப் பிரபலமானவரே நடிகை தனுஸ்ரீ தாத்தா. இவர் நடிகை மட்டும் அன்றி இந்திய மாடல் அழகியாகவும் இருந்திருக்கின்றார். பிரபல பாலிவுட் நடிகையான இவர் அடிக்கடி பாலியல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருவது வழக்கம். குறிப்பாக 2018-ஆம் ஆண்டு நடிகைகள், மற்றும் முக்கிய பிரபலங்கள் பலரும் metoo பாலியல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து இருந்தனர். இதில் தனுஸ்ரீ தத்தாவும் ஒருவர். அதாவது இவர் தன்னை நடிகர் நானா படேகர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்து இருந்தார்.

இதனைத் தொடர்ந்து தனுஸ்ரீ தத்தா தற்போது மறுபடியும் குற்றச்சாட்டு ஒன்றினை முன் வைத்திருக்கின்றார். அதாவது இவர் சமீபத்தில் கார் விபத்து ஒன்றில் சிக்கியிருந்தமை அனைவரும் அறிந்த ஒரு விடயமே. இது தொடர்பாக இவர் கூறுகையில் "எனக்கு நடந்த கார் விபத்து, என்னோட கார் பழுதானதற்கு எல்லாம் காரணம் யாரோ ஒருவர் தான்" எனத் தெரிவித்திருக்கின்றார்.

இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றினை இட்டுள்ளார். அதில் தான் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் மிகவும் அழுத்தத்தில் இருப்பதாகவும், அதற்காக தான் தற்கொலை செய்து கொள்ளமாட்டேன் எனவும், மற்றவர்களால் தான் குறிவைத்து மிகவும் மோசமாக துன்புறுத்தப்படுவதாகவும், இதனைக் கருத்திற் கொண்டு தயவுசெய்து யாராவது எனக்கு உதவி செய்யுங்கள் எனக் குறிப்பிட்டு இருக்கின்றார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் "கடந்த ஆண்டு எனக்கு கிடைக்க இருந்த பட வாய்ப்பு பறிக்கப்பட்டது. அதன் பிறகு வீட்டில் வேலை செய்யும் எனது வேலைக்காரி நான் குடிக்கும் தண்ணீரில் ஏதோ ரசாயானத்தை கலந்ததால் எனது உடல் நிலை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டது. வேண்டுமென்றே எனது வாகனத்தில் இரண்டு முறை பழுதை ஏற்படுத்தி விபத்தை ஏற்படுத்தினர். நான் உயிரிழப்பதில் இருந்து ஒருவாறாக தப்பித்து மும்பை வந்தேன். ஆனால் இப்போது எனது வீட்டிற்கு வெளியில் மிகவும் அருவருப்பான சம்பவங்கள் பல நடக்கின்றன. இதற்காக நான் தற்கொலை செய்து கொள்ள மாட்டேன். எங்கேயும் போகவும் மாட்டேன்" எனவும் கூறியிருக்கின்றார்.

மேலும் இப்பதிவில் "நான் எங்கேயும் போக மாட்டேன், இங்கேயே இருந்து எனது நடிப்பில் கவனம் செலுத்துவேன். பாலிவுட் மாபியாக்களும், அரசியல்வாதிகளும், சமூக விரோத கிரிமினல்களும் சேர்ந்து கொண்டு என்னை துன்புறுத்தி வருகின்றனர். இவை அனைத்திற்கும் metoo வில் நான் குற்றம் சாட்டியவர்கள்தான் காரணம் என்று எனக்குத் தெரியும். நான் அநீதிக்கு எதிராக நின்றதற்காக என்னை துன்புறுத்துகின்றனர்".

மேலும் "இவ்வாறு நான் துன்புறுத்தப்படுவது, இது எந்த மாதிரியான இடம்? மகாராஷ்டிராவில் கட்டாயம் ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வரவேண்டும். இங்கே அனைத்து விஷயங்களும் கை நழுவிப் போகின்றன. இதனால் என்னைப் போன்ற பலரும் கஷ்டப்படுகிறார்கள். இன்று எனக்கு நடப்பது நாளை உங்களுக்கும் நடக்கலாம்" எனவும் குறிப்பிட்டிருக்கின்றார். நடிகை தனுஸ்ரீ தத்தாவின் இந்தப் பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாக மாறி வருகின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement