• May 08 2024

"இனி நான் அவனுக்கு போன் பண்ண மாட்டேன்"…காதலனால் விமான நிலையத்தில் நின்று அழுத பிரபல நடிகை

Prema / 1 year ago

Advertisement

Listen News!

இந்தி சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான பெண் நட்சத்திரங்களில் ஒருவர் நடிகை ராக்கி சாவந்த். இவர் நடிகை மட்டுமன்றி ஒரு அரசியல் வாதியும் கூட. அத்தோடு நாட்டியக் கலைஞராகவும், நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் பணியாற்றியிருக்கின்றார். இவர் இந்தியில் மட்டுமல்லாது கன்னடம், மராத்தி, தெலுங்கு, தமிழ் மொழிகளிலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். இவர் சர்ச்சைக்கு பேர் போன ஒரு நடிகையாகவும் உள்ளார்.

இவ்வாறாக படங்களில் ஓய்வில்லாமல் நடித்து வந்த நடிகை ராக்கி சாவந்த் என்பவர் இந்தி தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 15 இல் கலந்து கொண்டிருந்தார். அப்போது ரிதேஷ் என்பவரைக் கொண்டு வந்து அறிமுகப்படுத்தி தாங்கள் இருவரும் காதலிப்பதாகக் கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து இவர்கள் இருவரும் திருமணமும் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. எனினும் இந்த காதல் பந்தம் நீண்ட நாட்கள் நிலைக்கவில்லை. சில மாதங்களிலேயே இவர்கள் இருவரும் பிரிந்து விட்டனர்.

இந்த நிலையில் நடிகை ராக்கி சாவந்த் தற்போது அடில்கான் என்பவரைக் காதலித்து வருகின்றார். இவர் தனது காதலனை காண்பதற்காக சமீபத்தில் டெல்லிக்கு சென்றிருக்கின்றார். ஆனால் அங்கு அவரால் அடில் கான் ஐ சந்திக்க முடியவில்லை. இதனால் டெல்லியில் இருந்து திரும்பி வந்த நடிகை ராக்கி சாவந்த் தலைவிரிகோலமாக அழுத நிலையில் மும்பை விமான நிலையத்தில் வைத்து பேட்டி ஒன்றினை அளித்திருக்கின்றார்.

அதில் அவர் கூறுகையில் "என் காதலனைச் சந்திப்பதற்காக டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றேன். ஆனால் அடில் என்னை சந்திக்க வரவே இல்லை. இனி அவனுக்கு நான் போன் பண்ணவே மாட்டேன். இந்த முடியைக் கூட என் காதலன் அடிலுக்காக தான் இதேபோன்று மாற்றினேன்" என்று முடிக்கு கலர் அடித்திருப்பதை சுட்டிக் காட்டி கூறியிருக்கின்றார். இதனைப் பார்த்த ரசிகர்கள் "ரிதேஷ் போன போல அடிலும் போய் விட்டார் கவலைப் படாதீர்கள்" எனக் கூறி வருகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement