• May 20 2024

ஐஸ்வர்யாவால் கண்ணனுக்கு காத்திருந்த ஷாக்..வம்பிழுத்த ஜனார்த்தனனுக்கு கதிர் செய்த வேலை..இன்றைய எபிசோட் அப்டேட்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் யாரும்எதிர்பார்க்காத விதமாக ஒற்றுமையாக இருந்த அண்ணன் தம்பிகள் பிரிந்து விட்டனர். அதிலும் ஜீவா வீட்டை விட்டு வௌியேறியது அனைவரும் எதிர்பார்த்த விடயம் தான்.

ஆனால் இதையே சாட்டாக வைத்து ஐஸ்வர்யாவும் கண்ணனைக் கூட்டிக் கொண்டு கிளம்பியது தான் யாராலும் எதிர்பார்க்காத விடயமாக இருக்கின்றது.இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கப்போகின்றது என்பதை பார்ப்போம்..



கண்ணனும் ஜஸ்வர்யாவும் பேசிக்கொண்டு இருக்கின்றனர்.அதாவது “EMIல தானே வாங்கி இருக்கிறம் அதை சமாளிச்சிடலாமா..” என கண்ணன் கேட்கின்றார். அதற்கு ஜஸ் ஆம்  என சொல்கின்றார்.அதன் பிறகு இருவரும் கடைக்கு போய் சமான் வாங்குகின்றனர்.


திடீரென  அதிக விலைக்கு சாமான் வாங்கின்றார் ஜஸ்வர்யா.தேவையில்லாத பொருள்கள் எல்லாம் வாங்கி பில்லை அதிகரித்து விடுகின்றார்.அதைப்பார்த்து கண்ணன் ஷாக்கடைகின்றார்.பின் எல்லா மூட்டைகளையும் எடுத்து வீட்டிற்கு கொண்டு செல்கின்றனர்.

இதன் பின் கதிர் மீனாவீட்டிற்கு கயலைக் கூட்டிட்டு செல்கின்றார்.அங்கே விட்டதும் கதிரிடம் மீனா இவ அழாமல் இருந்தாளா என கேட்கின்றார்.அதற்கு கதிரோ “அவள் ஏன் அழப்போகின்றாள்.நாங்க என்ன புது ஆளா..” என என்று சொல்கிறார்.

அதன் பின் நக்கலாக ஜனார்த்தனன் கதிரை  வம்புக்கு இழுக்க அசால்டாக பதிலளித்து விட்டு கதிர் செல்கின்றார்.இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகின்றது.



Advertisement

Advertisement