• Sep 20 2024

திருச்சிற்றம்பலம் படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் ரிலீஸ்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் நல்ல வரவேற்ப்பு கிடைக்காவிட்டாலும் பின்னர் தன் நடிப்பு திறமையால் உச்சம் தொட்ட நடிகர் தான் தனுஷ்.இவர நடிப்பில் இறுதியாக வெளியாகிய திரைப்படம் மாறன். இந்தத் திரைப்படத்தை தொடர்ந்து நானே வருவேன், திருச்சிற்றம்பலம் வாத்தி ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.

அந்த வகையில் இயக்குநர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைபடம் தான் ‘திருச்சிற்றம்பலம்’.இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடம் சென்னையில் ஆரம்பிக்கப்பட்டது.

இப் படத்தில் பாரதி ராஜா, பிரகாஷ் ராஜ், கென் கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். அதே போல கதாநாயகிகளாக ப்ரியா பவானி ஷங்கர் நித்யா மேனன் ராஷி கண்ணா ஆகியோர் நடித்துள்ளனர்.

அந்த வகையில் பிரியா பவானி சங்கர் ரஞ்சனி என்ற கேரக்டரில் நடித்த நிலையில் அடுத்ததாக பாரதிராஜா சீனியர் திருச்சிற்றம்பலம் என்ற கேரக்டரில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது

மேலும் இதனை அடுத்து பிரகாஷ்ராஜ் நீலகண்டன் என்ற கேரக்டரில் நடித்திருக்கும் நிலையில் அதன்பின் நித்யாமேனன் சோபனா என்ற கேரக்டரில் நடித்திருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த படம் ஆகஸ்ட் 18-ஆம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த படத்தில் இடம்பெற்ற தாய்க்கிழவி என்ற சிங்கிள் பாடல் வெளியாகி வைரல் ஆனது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற இரண்டாவது சிங்கிள் பாடலான மேகம் கருக்காதா என்ற பாடல் இன்று வெளியாகியுள்ளது. அனிருத் இசையில் தனுஷ் எழுதி பாடிய இந்த பாடலை வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement