• Sep 20 2024

பிரதமர் மோடியால் இளையராஜாவுக்கு வழங்கப்பட்ட கௌரவம்- குவிந்து வரும் பாராட்டுக்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இசை ஜாம்பவானாக வலம் வருபவர் இளையராஜா. தனது இசையினால் ரசிகர்கள் பலரின் நெஞ்சங்களைக் கட்டிப் போட்ட இவர் இதுவரைக்கும் 7000ம் பாடல்களுக்கு மேல் இசையமைத்துள்ளார்.

மேலும் சமீபகாலமாக இவருடைய பாடல்கள் பலவற்றை இவரது மகனான யுவன் சங்கர் ராஜா ரீ மேக் செய்து வெளியிட்டு வருகின்றார். அவையும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்று வருவதையும் காணலாம்.

அவர் சில மாதங்கள் முன்பு பிரதமர் நரேந்திர மோடியை அம்பேத்கர் உடன் ஒப்பிட்டு ஒரு புத்தகத்தில் முன்னுரை எழுதி இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் அந்த கருத்தை திரும்ப பெற மாட்டேன் என இளையராஜா உறுதியாக இருந்தார்.

இந்நிலையில் தற்போது இளையராஜாவுக்கு எம்பி பதிவு வழங்கப்பட்டு இருக்கிறது. மாநிலங்களவை உறுப்பினராக அவர் நியமன எம்பி-யாக பிரதமரால் நியமிக்கப்பட்டு இருக்கிறார். இந்த அறிவிப்பு வந்ததும் தற்போது இளையராஜாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement