• May 20 2024

மூர்த்தியுடன் நடந்த சண்டையை தனது வீட்டில் பத்த வச்ச மீனா-தனத்திற்கு தெரியாமல் முல்லையும் கதிரும் போட்ட பிளான்

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடந்தது என்று பார்ப்போம்.

மீனாவின் அம்மா வீட்டுக்கு வரும் ஜீவாவும் மீனாவும் கல்யாண வேலைகள் குறித்து பேசுகின்றனர். பின்னர் தான் மற்ற வேலைகளை போய் பார்க்கிறேன் என்று சொல்லி கிளம்பி விட மீனா தனது பெற்றோரிடம் வீட்டில் நடந்த விடயங்களைக் கூறுகின்றார். இதனால் அதிர்ச்சியடைந்த மீனாவின் அப்பா மாப்பிள்ளை மூர்த்தியை எதிர்த்துப் பேசினாரா எனக் கேட்கின்றார்.பின்னர் அந்தக் குடும்பத்தை விட்டிட்டு நம்ம வீட்டுக்கு இவங்க வந்தாலே போதும் என்று யோசிக்கின்றார்.


அதன் பின்னர் தனம் வீட்டில் எல்லோரும் இருந்து பேசிக் கொண்டிருக்கும் போது மீனா தங்கையோட கல்யாணத்திற்கு சீக்கரமே போகணும் என்றும் ஜீவா நடந்து கொண்ட விதம் பற்றியும் பேசிட்டிருக்கும் போது தனம் எல்லோரையும் அமைதியாக இருக்க சொல்கின்றார். எல்லாரும் கல்யாணம் முடிந்த பிறகு இதைப் பற்றி பேசலாம் என கூறுகின்றார்.


பின்னர் எல்லோரும் போனவுடன் மூர்த்தி இரண்டு வீட்டுக்கும் மொய் எப்படி வைக்கிறது திருமணத்திற்கு என்ன செய்வது என்று குறித்து தனத்திடம் கேட்கிறார். பின்னர் கதிருக்கு சாப்பாடு வைததுக் கொண்டிருக்கும் போது முல்லையின் அம்மா போன் செய்து மல்லியின் தம்பிக்கு மொய் எப்படி வைக்கப் போறீங்க என்று கேட்கிறார்.

அதற்கு முல்லை அதெல்லாம் வீட்டிலேயே பார்த்துப்பாங்க என்று கூற நீங்க தனியா வையுங்க என்று கூற அந்த யோசனையை கதிரிடம் சொல்கின்றார் முல்லை. அத்தோடு கதிர் 5ஆயிரம் வைத்தால் போதும் தானே பிரசாந்திற்கு அப்பிடியே வைப்போம் என பேசிட்டு இருக்கின்றனர்.


தொடர்ந்து ஐஸ்வர்யாவும் கண்ணனும் கல்யாண வீடடுக்கு செல்லது குறித்து பேசிக் கொண்டிருக்கின்றனர். இத்துடன் இந்த எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement