• Sep 19 2024

நீலாம்பரியை பதம்பார்த்த பிரபல இயக்குநர்.. மனைவிக்கு தெரிந்து போன கர்ப்பமான விஷயம் ..! நடந்தது என்ன?

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் குடும்ப செண்டிமெண்ட் படங்களை இயக்கி வெற்றி பெற்ற இயக்குநர் ஒருவர் தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் இவருக்கு வாய்ப்புகள் கொடுத்து அதன் மூலம் நடிகை ரம்யா கிருஷ்ணனின் மார்க்கெட் மிகப்பெரிய அளவில் சென்று இருக்கிறது. தொடர்ந்து பணியாற்றியதால் இவர்கள் இருவருக்குள்ளும் நட்பும் காதலாக மாறி ரொம்பவும் நெருக்கமாக பழகி இருக்கிறார்கள்.

இவர்கள் இருவருடைய காதல் விவகாரமும் இயக்குநரின் மனைவி காதுக்கு சென்று இருக்கிறது. அவரும் இவர்கள் இருவரையும் பிரிக்க எவ்வளவோ முயற்சி செய்திருக்கிறார். ஆனால் எதுவுமே வேலைக்கு ஆகவில்லை. இறுதியில் ரூபாய் 80 லட்சம் தருகிறேன் நீ அவரை விட்டு ஒதுங்கிக் கொள் என்று பேரம் பேசி இருக்கிறார் அவருடைய மனைவி.

இருந்தாலும் ரம்யா கிருஷ்ணன் இது போன்ற பேரம் எதுவுக்கும் ஒத்து வரவில்லையாம். இயக்குநர் உடனான நெருக்கம் ரொம்பவும் அதிகமாகி இறுதியில் கர்ப்பமாகி இருக்கிறார். குழந்தையை கலைப்பதற்கு இயக்குநரின் மனைவியே ரம்யா கிருஷ்ணனிடம் பேசி இருக்கிறார். இந்த விஷயம் மீடியாவிலும் தெரிய ஆரம்பித்ததும் இருவருமே அதை மறுத்திருக்கிறார்கள்.

அதன் பின்னர் அவசர அவசரமாக 2003இல் கிருஷ்ண வம்சி என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது அவருக்கு ஒரு மகன் இருக்கிறார். திருமணத்திற்கு பெண் தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ரம்யா கிருஷ்ணன் தென்னிந்திய சினிமாக்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். 

தற்போது போன்று தொழில்நுட்பங்களும், சமூக வலைத்தளங்களும் இல்லாத காலகட்டம் என்பதால் இவர்களுடைய காதல் கதை வெளியில் வராமல் இருந்திருக்கிறது. ரம்யா கிருஷ்ணன் திருமணம் செய்த பிறகு இந்த விஷயம் நாளைடைவில் அப்படியே மறைந்தும் விட்டது என்றே சொல்லலாம்.


Advertisement

Advertisement