• Sep 20 2024

இந்தப் படத்திற்காக இயக்குநர் என்னை இரண்டு முறை கொல்லப் பார்த்தார்- அதிர்ச்சித் தகவலைத் கூறிய ஆர்யா

stella / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள திரைப்படம் தான் கேப்டன். இந்த படத்தின் வெளியீட்டை முன்னிட்டு ப்ரமோஷன் பணிகள் சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்றது.இப்படம் வரும் 8ம் திகதி பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.

அதில் நடிகர் ஆர்யா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பட குழுவினர் கலந்து கொண்டனர்.  அதில் பேசிய ஆர்யா கேப்டன் என்ற தலைப்பை பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி. சவுத்திரிடமிருந்து பெற்றதாக கூறினார்.  சக்தியின் சவுந்தர்ராஜன் மீது இருக்கும் நம்பிக்கையின் காரணமாகத்தான் இந்த திரைப்படத்தில் நடித்தேன் என ஆர்யா கூறினார்.


இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பில் இரண்டு முறை இயக்குநர் தன்னை கொல்ல பார்த்தார் என விளையாட்டாக பேசினார்.அந்த அளவிற்கு இந்த திரைப்படத்தில் கஷ்டப்பட்டு நடித்ததாகவும் ஆர்யா தெரிவித்தார்.

அவரை தொடர்ந்து பேசிய சக்தி சௌந்தர்ராஜன், கேப்டன் போன்ற திரைப்படத்தை  இந்த அளவுக்கு குறைந்த பட்ஜெட்டில் யாரும் உருவாக்கியது இல்லை.இதை சாத்தியமாக்கிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கூறினார்


கேப்டன் படத்தின் இசையமைப்பாளர் டி. இமான் பேசுகையில்,  டெடி படத்திற்குப் பிறகு மீண்டும் ஆர்யா மற்றும் சக்தி சௌந்தர்ராஜன் உடன் பணியாற்றுகிறேன்.ஆர்யாவை இயக்குநர் சிறந்த முறையில் வேலை வாங்கியுள்ளார்.அதற்கான பலன் திரையில் தெரிகிறது என கூறினார்.


Advertisement

Advertisement