• Apr 26 2024

தற்கொலைக்கு முன் கதறிய நடிகை-போலீசாரிடம் சிக்கிய தீபாவின் 3 செல்போன்கள்-வெளியான திடுக்கிடும் தகவல்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக நடிகை தீபா தனது காதலரிடம் கதறிய தகவல் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகை தீபா கடந்த 17 ஆம் தேதி சென்னை விருகம்பாக்கத்திலுள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவரது வீட்டில் இருந்து கடிதம் ஒன்றை  மீட்டுள்ளனர்  போலீசார்.

மேலும்  அதில் தான் ஒருவரை காதலித்ததாகவும் ஆனால் அந்த காதல் கைக்கூடவில்லை என்றும் தனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் தீபா உதவி இயக்குநரான சிராஜுதீன் என்பவரை காதலித்து வந்தது  தற்போது தெரியவந்தது.



சிராஜுதீன் தான் இயக்கும் படத்தில் தீபாவை ஹீரோயினாக நடிக்க வைப்பதாக கூறி ஆசைக்காட்டி பழகியுள்ளார். மேலும்  இருவரும் நெருக்கமாக பழகிய நிலையில் சிராஜுதீன் தீபாவை விட்டு விலகியதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தீபா தற்கொலை செய்வதற்கு முன்பாக யாரிடமெல்லாம் போனில் கூறியுள்ளார் என்பதை அவருடைய போன்களை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர் போலீசார். மேலும் அதில் தீபா தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக சிராஜுதீனிடம் போனில் பேசியுள்ளார்.



அப்போது இருவருக்கும் இடையே கடுமையான சண்டை  ஏற்பட்டு தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறியிருப்பது தெரியவந்துள்ளது. எனினும் இதனை தொடர்ந்து தீபாவின் 3 செல்போன்களையும் கோயம்பேடு போலீசார் தடயவியல் துறைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதனிடையே தீபாவின் காதலரான சிராஜுதீன் படப்பிடிப்பில் உள்ளதால் விசாரணைக்கு ஆஜராக நேரம் கேட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. சிராஜுதீனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 2 பிள்ளைகள் உள்ள நிலையில் தீபாவையும் காதலித்து அவருடன் நெருக்கமாக பழகி வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement