• Sep 20 2024

'அவன மொத்தமா வெறுக்க முடில' குழப்பத்தில் தவிக்கும் ஐஷு..! ஜாக்கிரதையா இரு - மணி அட்வைஸ்!

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் தற்போது மேலும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. 

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்களுடன் தொடங்கிது. எனினும் அனன்யா ராவ், பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன் ஆகியோர் எலிமினேட் ஆகியுள்ளனர்.

மேலும், பிக்பாஸ் வரலாற்றில் இம்முறை  மேலும் ஐந்து பேர் வைல்டு கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பிவைக்கப்பட்டு உள்ளனர்.

எனினும், பிக்பாஸ் சீசன் 7இல் வழமைபோலவே இரண்டு காதல் ஜோடிகள் தாம் வந்த நோக்கத்தை மறந்து வீட்டை சுற்றி உலாவருகின்றனர்.ரவீனா ஒருபக்கம் இருக்க மறுப்பக்கம் புலம்பி வருகிறார்  ஐஷு.


அதன்படி, பிக்பாஸ் வீட்டிலுள்ளவர்கள் தன்னையும் நிக்சனையும் இணைத்து  பேசுவது, வைல்ட் கார்டு என்ட்ரிகள் சொன்ன கமெண்ட்டுகள் போன்றவற்றால் ஐஷு குழப்பம் அடைந்திருந்தார்.இதை தொடந்து தனது மனநிலையை பற்றி  மணியிடம் மனம் விட்டு பேசினார். 

அதன்படி, 'அவன பார்த்தாலும் பாவமா இருக்கு. அவாய்ட் பண்ணவும் முடியல. அவன் என்கிட்ட அப்படி சொல்லிட்டான்' என்று ஐஷு சொல்ல, 'ஜாக்கிரதையா இருந்துக்கோ, அவ்வளவுதான்..' என அட்வைஸ் செய்தார் மணி. அத்துடன், 'நான் வெளிய போயிட்டா நல்லாயிருக்கும்ன்னு நினைக்கிறன்' என்றெல்லாம் ஐஷூ குழம்பித் தவிக்கிறார்.


இதைதொடந்து, நிக்ஸன்- ஐஷூ ஆகிய இருவரும் அமர்ந்து பேச 'நீ சொன்னா நாம பேசுரத நிறுத்துவோம்' என நிக்ஸன் சொல்ல, 'சரி ஓகே.. அப்படியே செய்வோம்'  என்ற தீர்மானத்துடன் ஐஷூ அங்கிருந்து நகர்கிறார். எனினும் அவருக்கு குழப்பம் தீரவில்லை.  

இவ்வாறு பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடரும் காதல் ஜோடிகளை வெளியில் இருந்து பார்க்கும் ரசிகர்கள் கழுவியுற்றினாலும் இதெல்லாம் சாதாரணம்பா என ஈசியாக நழுவிச் செல்வதை நாம் அறிந்ததே..

Advertisement

Advertisement