• May 19 2024

அதற்காக மட்டுமே பல பெண்களிடம் பழகிய ஷீசான்.. திடுக்கிடும் தகவலைக் கூறிய துனிஷாவின் தோழி..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த 20 வயதே ஆன நடிகை துனிஷா சர்மா டிசம்பர் 24-ஆம் தேதி ஷூட்டிங்ஸ்பாட்டில் இருக்கும் மேக்கப் அறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதாவது இவர் 'அலிபாபா தஸ்தான் இ காபூல்' தொடரில் நடித்து வந்தார். அந்த தொடரில் நடிக்கும் ஷீசான் கானும், துனிஷாவும் காதலித்து வந்துள்ளனர்.


இந்நிலையில் ஷீசான் தான் துனிஷாவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரின் அம்மா புகார் ஒன்றினை அளித்தார். இதையடுத்து ஷீசானை போலீசார் உடனடியாக கைது செய்துள்ளனர். மேலும் துனிஷா சர்மா இறப்பதற்கு 15 நாட்களுக்கு முன்பு தான் ஷீசானை பிரிந்தார். அதில் இருந்து மனஅழுத்தத்தில் தான் இருந்து வந்துள்ளார் என துனிஷாவின் தாய் தெரிவித்துள்ளார். 

இதனைத் தொடர்ந்து ஷீசான் பற்றி துனிஷாவின் தோழியும், நடிகையுமான ரய்யா லபிப் அதிர்ச்சி  பல விடயங்களை முன் வைத்துள்ளார். அதாவது "ஒரே நேரத்தில் பல பெண்களை டேட் செய்து வந்தார் ஷீசான். பல பெண்களுடன் இவர் தொடர்பு வைத்திருந்தார்" எனக் கூறியுள்ளார்.


மேலும் அவர் கூறுகையில் "ஷீசான் கானுக்கு ஒன்றல்ல பல காதலிகள். 6 முதல் 10 பெண்களுடன் உறவு வைத்திருந்தார். ஷீசான் கானுடன் உறவில் இருந்து கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு பிரிந்த ஒருவர் தான் இந்த தகவலை என்னிடம் கூறினார். துனிஷா தற்கொலை செய்து கொண்டதை அறிந்த பிறகே அந்த பெண் என்னை தொடர்பு கொண்டு இதனை தெரிவித்தார்" என்றார்.

அத்தோடு "ஷீசானால் ஏமாற்றப்பட்ட அந்த பெண் மன அழுத்தத்திற்காக சிகிச்சை பெற்று வருகிறார். அதனால் அவர் அது பற்றி பேசவிரும்பவில்லை. தன் செக்ஸ் தேவைக்காக பல பெண்களை யூஸ் செய்திருக்கிறார் ஷீசான். காதல், கமிட்மென்ட் என்று பேசி அவர்களை ஏமாற்றியிருக்கிறார். அந்த பெண்களுக்கு எல்லாம் துரோகம் செய்திருக்கிறார்" எனவும் தெரிவித்திருக்கின்றார். 


அதுமட்டுமல்லாது "டிவியில் ஷீசானின் அழகை பார்த்து பல பெண்கள் அவர் பக்கம் சாயந்திருக்கிறார்கள். அவருடன் நட்பாக பழகத் துவங்கியிருக்கிறார்கள். ஆனால் ஷீசானோ செக்ஸுக்காக மட்டுமே பழகியிருக்கிறார்" என்கிறார் ரய்யா லபிப்.

மேலும் "ஷீசானுக்கு காதல், கமிட்மென்ட் மீது ஈடுபாடு இல்லை. அதையே தான் துனிஷா விஷயத்திலும் செய்திருக்கிறார். துனிஷாவை யூஸ் செய்துவிட்டு பிரேக்கப் செய்துவிட்டார். அண்மையில் தான் ஷீசானின் பிற உறவுகள் பற்றி தெரிய வந்து அவரிடம் கேட்டிருக்கிறார் துனிஷா. நான் உன்னிடம் இருந்து பிரிந்துவிட்டேன் அதனால் விளக்கம் அளிக்கத் தேவையில்லை என்று கூறியிருக்கிறார் ஷீசான். இதையடுத்தே துனிஷா தற்கொலை செய்து கொண்டார்" எனவும் ரய்யா தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement