• Jul 27 2024

விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யாவை அழைத்த அஜித்.. மூவரும் ரகசிய பேச்சுவார்த்தை.. என்ன நடந்தது?

Sivalingam / 2 months ago

Advertisement

Listen News!

அஜித்தின் அடுத்த படமான ‘குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பில் நடைபெறும் காட்சிகள் குறித்து லீக் ஆகி விடக்கூடாது என்பதற்காக தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

எனவே தான் முதல் கட்ட படப்பிடிப்பில் என்ன காட்சி படம் எடுக்கப்படுகிறது என்று வெளியே தெரியாமல் இருப்பதாகவும் ஸ்டண்ட் காட்சி மற்றும் இன்ட்ரோ பாடல் காட்சி படமாக்கப்படுவதாக கூறப்பட்டாலும் அது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் ‘குட் பேட் அக்லி’ படத்தில் ஏற்கனவே பிரபல தெலுங்கு நடிகர் சுனில் ஒரு வில்லனாக நடித்து வரும் நிலையில் மேலும் இரண்டு வில்லன்க கேரக்டர் இந்த படத்தில் இருப்பதாகவும் அதில் நடிக்க இரண்டு முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில்தான் ஆதிக் ரவிச்சந்திரன், அஜித்திடம் இந்த படத்தில் இரண்டு வில்லன்களாக விஜய் சேதுபதி மற்றும் எஸ்ஜே சூர்யா நடித்தால் நன்றாக இருக்கும் என்று சொல்ல அவர்களிடம் எப்படி பேசுவது என்று தெரியவில்லை என்று கூறியதாகவும், உடனே அஜித் நானே அவர்களை பேசி அழைத்து பேசுகிறேன் என்று கூறியதாகவும் செய்திகள் கசிந்துள்ளன.

இதனை அடுத்து ஹைதராபாத்தில் படப்பிடிப்பு தளத்தில் விஜய் சேதுபதி மற்றும் எஸ்ஜே சூர்யா ஆகிய இருவரையும் அழைத்து அஜித் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் இந்த படத்தில் உள்ள இரண்டு வில்லன் கேரக்டர்களில் உங்களால் நடிக்க முடியுமா என்று அஜித் கேட்டதாகவும் அதற்கு இருவரும் ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

விஜய் சேதுபதி கடந்த சில மாதங்களாக வில்லனாக நடிப்பதில்லை என்று முடிவெடுத்ததாக கூறிய நிலையில் அஜித் அழைப்பின் பேரில் அவர் நடிக்க இருப்பதாக தெரிகிறது. ஏற்கனவே ரஜினி, விஜய், ஷாருக்கான் உள்பட முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக நடித்து விட்ட விஜய் சேதுபதி முதல் முறையாக அஜித்துக்கு வில்லனாக நடிக்க இருப்பதை அடுத்து இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement