• Sep 19 2024

சொந்த வீட்டில் இதை செய்ய கூட சூப்பர் ஸ்டாருக்கே அனுமதி இல்லையாம்-அவரே கூறிய தகவல்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவுட்டில் முன்னணி நடிகர்களில் ஓருவராக திகழ்பவர் தான் ஷாருக்கான்.இவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் ஹிட்டடித்து விடும்.

இவ்வாறுஇருக்கையில் தன் குடும்பத்துடன் பங்களாவில் வசிக்கிறார். அந்த பங்களாவின் பெயர் மன்னத். மும்பையில் இருக்கும் மன்னத்தை பார்த்து பார்த்து அலங்கரித்துள்ளார் ஷாருக்கானின் மனைவியான கௌரி.

மேலும் அவர் ஒரு இன்டீரியர் டிசைனர் ஆவார். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் ஷாருக்கான் தெரிவித்ததாவது….

எங்கள் வீட்டில் கௌரி தான் ராணி. வீட்டின் டிசைனில் தலையிட எனக்கு அனுமதி இல்லை. அதை மட்டும் நீங்கள் செய்யவே கூடாதென்று கூறிவிட்டார். அவரே அருமையான டிசைனர் ஆவார்.

மேலும் எங்கள் வீட்டில் இருக்கும் பொருட்களில் பெரும்பாலானவற்றை கௌரி தான் வாங்கினார். எங்கள் வீட்டில் 11 முதல் 12 டிவி இருக்கிறது. என் பிள்ளைகள் ஆர்யன், சுஹானா மற்றும் ஆப்ராம் அறைகளில் தனித்தனி டிவி இருக்கிறது.
gauri khanஎங்கள் வீட்டில் பெரும்பாலான அறைகளில் டிவி இருக்கிறது என்றார்.

கெரியரை பொறுத்தவரை பதான் படத்தில் நடித்து வருகிறார் ஷாருக்கான். அத்தோடு அட்லியின் இயக்கத்திலும் நடித்து வந்தார். இதற்கிடையே ஷாருக்கான் குடும்பம் தற்போது நிம்மதியாக இருக்கிறது.

ஷாருக்கானின் மூத்த மகன் ஆர்யன் கான் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். எனினும் அதன் பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில் போதைப் பொருள் வழக்கில் ஆர்யன் கானுக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என்று கூறி அவரை விடுவித்துள்ளனர் தேசிய போதை தடுப்புப் பிரிவு துறை அதிகாரிகள்.

Advertisement

Advertisement