• Sep 19 2024

நொருங்கிப்போனேன்; உங்களை தரம் தாழ்த்தி கொள்ளாதீர்கள்-செஃப் வெங்கடேஷ் பட்!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

காமெடியுடன் கலந்த குக்கிங் என்ற கான்செப்டில் மிகப் பெரிய ஹிட் அடித்திருக்கும் ரியாலிட்டி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி சீசன் 3 .விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வருகிறது.

மேலும் இதில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒளிப்பரப்பான எபிசோடில் செஃப் வெங்கடேஷ் பட் ஒரு விஷயத்தை பகிர்ந்து இருந்தார். அதாவது குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்த்து தனக்கு குழந்தை பிறந்ததாக ஒரு பெண் தன்னிடம் கூறியதாக பட் தெரிவித்தார்.

அவர் பேசியது இணையத்தில் வைரலானதை தொடர்ந்து பல மீம்ஸ்கள் இணையத்தில் வைரலாக தொடங்கின.இவரை வைத்து மீம்ஸ் கிரியேட்டர்கள் பர மீம்ஸ்களை தெறிக்க விட்டார்கள்.ஏகப்பட்ட ட்ரோல்கள் இன்ஸ்டா, ட்விட்டர், ஃபேஸ்புக்கில் பரவின. அதே நேரம் செஃப்வின் கருத்துக்கு ஆதரவு குரல்களும் ஒருபக்கம் ஒலித்துக் கொண்டிருந்தன.

இதனை பார்த்து விட்டு அவர் ஒரு பதிவை இட்டுள்ளார்.அதிர் அவர் கூறியதாவது…

10 வருடம் குழந்தை இல்லாத பெண் ஒருவர் கூட தனது சோஷியல் மீடியாவில் செஃப் பட் சொன்ன விஷயம் நூற்றுக்கு நூறு உண்மை என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் இதுக் குறித்து செஃப் வெங்கடேஷ் பட் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அவரின் இந்த உருக்கமான பதிவு பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது.

கடந்த 2 நாட்களாக நொருங்கிப்போனேன்.என்னை ட்ரோல் செய்கிறார்கள் என்பதற்காக அல்ல.ஆனால் மனிதம் செத்துவிட்டதோ என்று எண்ணி வருந்தினேன்.குழந்தை செல்வம் இருப்பவர்களுக்குத்தான் தெரியும் அது எவ்வளவு பெரிய பாக்கியமென்று.இல்லாதவர்களின் நிலையை யோசித்துப் பாருங்கள்.மீம் கிரியேட்டர்கள் தயவு செய்து என்னை கேலி செய்வதாக நினைத்து உங்களை தரம் தாழ்த்தி கொள்ளாதீர்கள் என கூறியுள்ளார்.இதை பார்த்த ரசிகர்கள் இவருக்கு ஆதரவாக பேசி வருகின்றார்.

Advertisement

Advertisement