• May 20 2024

ஸ்ரீநிதியின் பதிவிற்கு லைவில் உண்மையை கூறிய நட்சத்திரா-தீயாய் பரவும் வீடியோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழில் கடந்த 2016ஆம் ஆண்டு இயக்குநர் ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியான ‘கிடா பூசாரி மகுடி’ படத்தில் அறிமுகமானவர் மலையாள நடிகை நட்சத்திரா குட்டிசேரி.

இவர் நடித்த இந்த படம், எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. இதனால் சில காலம் திரையுலகில் இருந்து விலகியே இருந்தார். இதன் பின் ஜீதமிழில் ஒளிபரப்பான ‘யாரடி நீ மோகினி’ என்ற சீரியலில் நடித்து ரசிகர்களிடத்தே தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.இந்த சீரியல் மூலம், வெள்ளித்திரை மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடிக்க முடியாவிட்டாலும், சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.

இவருடன் யாரடி நீ மோகினி சீரியலில் நடித்தவர் தான் ஸ்ரீநிதி. இவர்கள் இருவரும் நெருங்கிய தோழிகளாகவும் இருக்கின்றனர்.

இந்நிலையில் இவரது தோழியும் சீரியல் நடிகையுமான ஸ்ரீநிதி கூறிய தகவல் ரசிகர்களிடத்தே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.அதாவது நட்சத்திரா விவாகரத்துப் பெற்ற ஒருவரைக் காதலிப்பதாகவும் அந்த நபர் மோசமானவர் என்றும் கூறியிருந்தார்.

இவ்வாறுஇருக்கையில் அதற்கு விளக்கம் கொடுக்கும் முகமாக லைவில் பல உண்மைகளை வெளியிட்டுள்ளார் நட்சத்திரா.அதாவது ஸ்ரீநிதி அந்த வீடியோ வெளியிட்ட போதே அதற்கு நான் விளக்கம் கொடுத்து வீடியோ வெளியிட்டு இருக்கனும்.அது சரி அவள் சில நாட்களாக பதிவிடும் பதிவுகளை பார்த்து நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று எண்ணி தான் நான் அந்த வீடியோவை பதிவிடவில்லை.நீங்கள் என் மீது வைத்திருக்கும் அன்பில் தான் அப்படி பட்ட கேள்விகளை கேட்டு வருகுறீர்கள்.அதாவது நீங்கள் நல்லா தான் இருக்குறீர்களா..? ஒரு பிரச்சனையும் இல்லையா என பல கேள்விகள்.

ஸ்ரீநிதி கூறிய உண்மை இல்லை.நான் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை.யாரும் என்னை கொடுமைப்படுத்தவும் இல்லை.நான் நல்லா தான் இருக்கேன்.ஒவ்வொரு நாளும் வேலைக்கு சென்று வருகின்றேன்.ரசிகர்கள் என் மீது அன்பு வைத்து இருப்பதற்கு நன்றி என தெரிவித்ததோடு இதை யாரும் பெருசாக்காதீர்கள் என தெரிவித்துள்ளார்.அந்த வீடியோ ரசிகர்களிடத்தே வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement