• Sep 20 2024

ரூ.215 கோடி பணம் பறித்த வழக்கு - வசமாக சிக்கிய இலங்கையை சேர்ந்த நடிகை..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் மனைவியை மிரட்டி ரூ.215 கோடி பணம் பறித்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் என்பவரை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கடந்தாண்டு கைது செய்தனர்.

அத்தோடு  அவரிடம் அமலாக்கப்பிரிவினர் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்களையும் வெளியாகி உள்ளது.


தொழிலதிபரின் மனைவியை மிரட்டி பறித்த பணத்தை வைத்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததாகவும், பாலிவுட் நடிகைகளுடன் உல்லாசமாக இருந்ததாகவும் கூறியுள்ளார் சுகேஷ். 

அதிலும் குறிப்பாக இலங்கையைச் சேர்ந்த பாலிவுட் நடிகையான ஜாக்குலின் பெர்னாண்டஸ் உடன் மிகவும் நெருக்கமாக பழகி வந்துள்ளார் சுகேஷ். அவருக்கு கோடிக்கணக்கில் பரிசுகளையும் வழங்கியது விசாரணையில் அம்பலமானது



இதையடுத்து இந்த வழக்கில் நடிகை ஜாக்குலினும் விசாரணை வளையத்திற்குள் உட்பட்டுள்ளார்.மேலும் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சுகேஷிடம் இருந்து பெற்ற பரிசுகள் குறித்த விவரங்களை தெரிவித்திருந்தார் ஜாக்குலின். இதையடுத்து அவருக்கு சொந்தமான ரூ.7.27 கோடி மதிப்புள்ள் சொத்துக்களை கடந்த ஏப்ரல் மாதம் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் முடக்கினர்.

இந்நிலையில், தொழிலதிபரின் மனைவியை மிரட்டி பணம் பறித்த வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸையும் குற்றவாளியாக சேர்த்துள்ளனர்.மேலும் இதுதொடர்பான குற்றப்பத்திரிக்கையையும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் இன்று தாக்கல் செய்துள்ளனர்.



 சுகேஷ் மோசடி செய்த பணத்தை அனுபவித்த குற்றத்திற்காக ஜாக்குலினின் பெயரும் தற்போது குற்றப்பத்திரிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement