• May 20 2024

முதல் முறையாக தனது இரண்டாவது குழந்தையின் புகைப்படத்தை பகிர்ந்து சௌந்தர்யா

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தன்னுடைய 38 ஆவது பிறந்தநாளை நேற்று கொண்டாடிய சவுந்தர்யா ரஜினிகாந்த், தன்னுடைய குழந்தை வீர் மற்றும் அப்பா ரஜினிகாந்துடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

 கோலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், 70 வயதை கடந்த பின்னரும் தொடர்ந்து தமிழ் சினிமாவில் கதாநாயகனான  நடித்து வருகிறார். எனினும் அந்த வகையில், அண்ணாத்த படத்தை தொடர்ந்து, இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக சென்னை ஈ.சி.ஆர் பகுதியிலுள்ள  ஒரு ஸ்டுடியோவில் நடந்து வருகிறது. இதே ஸ்டுடியோவில் தான் அட்லீ இயக்கி வரும் ஜவான் படப்பிடிப்பும் நடந்து வருவதாக கூறப்படும் நிலையில், ஷாருக்கானை ரஜினி நேரில் சென்று சந்தித்ததாகவும் தகவல் வெளியானது. 

அத்தோடு ரஜினிகாந்த் போலவே இவருடைய இரு மகள்களான ஐஸ்வர்யா, சவுந்தர்யா ஆகியோரும், சினிமாவில் இயக்குநராக பணியாற்றி உள்ளனர். இதில் ஐஸ்வர்யா கடந்த 2012-ம் ஆண்டு வெளியான தனுஷின் 3 படம் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்தார். இதன்பின்னர் வை ராஜா வை படத்தை இயக்கினார். எனினும் சமீபத்தில் தன்னுடைய காதல் கணவர் தனுஷை விவாகரத்து செய்த ஐஸ்வர்யா மீண்டும் திரைப்பட பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். அதே போல் ஆன்மிகம், உடல்பயிற்சி போன்றவற்றிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



ரஜினிகாந்தின் இளைய மகளான சவுந்தர்யா, அதேபோல் சவுந்தர்யா, கடந்த 2014-ம் ஆண்டு தந்தை ரஜினிகாந்தை வைத்து 'கோச்சடையான்'  படத்தை இயக்கியதன் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்தார்.அத்தோடு  அனிமேஷன் முறையில் இப்படத்தை படமாக்கி இருந்தார் சவுந்தர்யா, அவரின் முயற்சிக்கு  பலரது பாராட்டையையும் பெற்றார்.இதையடுத்து தனுஷை வைத்து வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து ஹிட் கொடுத்தார் சவுந்தர்யா.



மேலும் இவர் ஏற்கனவே தன்னுடைய முதல் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்ற நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், விசாகன் என்கிற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். எனினும் இதைத் தொடர்ந்து இரண்டாவது முடியாக கர்ப்பமான இவருக்கு செப்டம்பர் 11 ஆம் தேதி அழகிய ஆண் குணத்தை பிறந்தது. தன்னுடைய குழந்தைக்கு வீர் என பெயர் வைத்துளளதாக கூறி இந்த மகிழ்ச்சியான தகவலை அவர் வெளியிட பலரும் சவுந்தர்யா - விசாகன் ஜோடிக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.



இதை தொடர்ந்து நேற்று தன்னுடைய 38 ஆவது பிறந்தநாளை கொண்டாடிய சவுந்தர்யா, தன்னுடைய மகன் வீர் மற்றும் அப்பாவுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு நேற்று எனது பிறந்தநாளுக்கு நேரம் ஒதுக்கிய அனைவருக்கும் மிக்க நன்றி கடவுள்கள் இந்த ஆண்டு எனக்கு சிறந்த பரிசை அளித்துள்ளனர், அது என் வீர் பாப்பா. எனினும் இந்த அற்புதமான குழந்தைக்கு பின்னர் என் தந்தை இருப்பது வாழ்க்கை ஒரு உண்மையான ஆசீர்வாதம் என தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.


Advertisement

Advertisement