• Sep 20 2024

என்னை அழிப்பதற்கு சிலர் காத்துக்கொண்டுள்ளனர்! ஆதங்கமாக பேசிய கோபி! காணொளி இணைப்பு

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் தான்  பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் கோபி என்ற கதாபாத்திரத்தின் எதார்த்தமான நடிப்பை மக்களிடையே சிறப்பாக கொடுத்து ரசிகர்களை பெரிதளவில் கவர்ந்து வருகிறார் சதீஷ்.

அத்துடன், சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் சதீஷ், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.


அதில், தன்னை அழிக்க சில பேர் காத்துக்கொண்டிருப்பதாக பதிவிட்டுள்ளார்.இதை பார்த்த அவரது ரசிகர்கள் எல்லாரும் கோபிக்கு என்னாச்சு என்று பதறியடித்துள்ளனர்.

அதன்படி, அவர் நடித்த மலையாள சீரியலின் காணொளி ஒன்றை பதிவிட்டு ஆதங்கத்துடன் பேசிய சதீஷ்,

 'நான் மிகவும் ஆசையுடனும், பெரும் எதிர்பார்ப்புடன் நடிக்க ஒத்து கொண்ட கதாப்பாத்திரம். ஆனால் எதிர்பார்ப்புகள் பெரும் ஏமாற்றத்தில் தான் முடியும் என்பதை வாழ்க்கை எனக்கு மீண்டும் பாடம் கற்பித்தது. '

'நாம் என்ன தான் சிறப்பாக செயல் செய்தாலும், அதை அழிப்பதற்கு சில பேர் காத்து கொண்டிருப்பார்கள். நண்பர்களே.! இது தான் உண்மை. வாழ்க்கை தத்துவம்' என குறித்த காணொளியில் அவர் கூறி இருக்கிறார்.


Advertisement

Advertisement