• Apr 28 2024

திடீரென முதல் காதலை நினைத்து உருகிய செல்வராகவன்- அடடே அவர் மீது இப்படியொரு பாசமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் துள்ளுவதோ இளமை படம் மூலம் தனது பயணத்தை தொடங்கியவர் செல்வராகவன். இதையடுத்து காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன என தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி வெற்றி கண்ட செல்வராகவன், தற்போது நடிகராகவும் கலக்கி வருகிறார்.

 இவர் கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தின் மூலம் நடிகராக களமிறங்கினார்.இதையடுத்து அருண் மாதேஸ்வரன் இயக்கிய சாணிக்காயிதம் திரைப்படத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். பின்னர் நானே வருவேன் படத்தில் நடித்த செல்வராகவன், சமீபத்தில் மோகன் ஜி இயக்கிய பகாசூரன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.


 இப்படத்தில் அவரது நடிப்புக்கு பாராட்டுக்களும் கிடைத்து வருகின்றன. இப்படி நடிகராக கலக்கிக் கொண்டிருக்கும் செல்வராகவன், கைவசம் நிறைய படங்களையும் வைத்திருக்கிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களையும் பதிவிட்டு வருவார்.


அந்த வகையில் தற்பொழுது “அந்த முதல் காதலில் அப்படி என்னதான் இருந்ததோ.. நினைத்து நினைத்து ஆயுள் முடிந்தது. அது வாழ்க்கையில் ஒரு முறைதான் என்பதை கடவுளும் நம்மிடம் கூறவில்லை” என்று முதல் காதல் குறித்து உருக்கமான பதிவை வெளியிட்டு இருக்கிறார். அது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.இதனால் ரசிகர்கள் சோனியா அகர்வாலை நீங்க இன்னும் மறக்கலையா எனக் கேட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement