• May 21 2024

வெற்றியின் கண் முன்னாடியே வருணைக் கட்டிப் பிடித்த அபி- கண்மணி பார்த்த சகுனி வேலை -குழப்பத்தில் சங்கரநாராயணன்

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தென்றல் வந்து என்னைத் தொடும். இந்த சீரியலில் வெற்றி சுடர் தான் தன்னுடைய குழந்தை எனத் தெரிந்ததால் மிகவும் மகிழ்ச்சியில் இருந்தார். ஆனால் கண்மணி தான் வெற்றியை அடைய வேண்டும் என்பதற்காக வருணுக்கும் அபிக்கும் இடையில் தொடர்பு இருப்பது போல சித்தரித்து விட்டார்.

இப்படியான நிலையில் இன்றைய தினம் வருண் வந்ததும் அபி அவரைக் கட்டிப்பிடித்து அழுது கொண்டிருப்பதைப் பார்த்த வெற்றி அபி வருணைக் கல்யாணம் செய்து விட்டதாகவும் வருணுக்கும் அபிக்கும் பிறந்த குழந்தை தான் சுடர் என்று தவறாக நினைத்து விட்டார்.இத்தனை காலம் அபிக்காக தான் இருந்தும் அபி தன்னை விட்டிட்டு இன்னொருத்தரோடு வாழ ஆரம்பிச்சிட்டாளே என்று வேதனைப்படுகின்றார்.ஆனால் அபி அவரை தனது சகோதரன் போலவே நினைத்து வருகின்றார்.


இப்படியான நிலையில் அபியின் அப்பாவும் விஜியும் போய் சுடர் உங்க பொண்ணு என்ற விஷயத்தை சொல்லாமல் மறைச்சிட்டோமே என்று நேரடியாக சொல்லாமல் உண்மையை இத்தனை காலம் மறைச்சிட்டோமே மன்னிச்சிருங்க என்று சொன்னதும் வெற்றி, அபி கல்யாணம் செய்த விஷயத்தை தான் சொல்லல என்று நினைத்து அவர்களுடன் சண்டை பிடிக்கின்றார்.


மேலும் கண்மனி இருவரும் மனம் திறந்துபேச முடியாமல் கதையை சமாளித்து விடுகின்றார். இதனால் வெற்றி தான் தனி மரம் ஆகி விட்டதாக நினைத்து கவலையடைகின்றார். கண்மனியின் சகுனி வேலையால் வெற்றி அபி மீது கடும் கோபத்தில் இருக்கிறார்.இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.இனிமேல் சுடருடன் வெற்றி இணைவாரா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் .


Advertisement

Advertisement