• Apr 26 2024

வீட்டுக்கு வந்ததும் சந்தியா செய்த வேலை, மொத்த குடும்பமும் அதிர்ச்சி – இன்றைய முழு எபிசோடு அப்டேட்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

வீட்டுக்கு வந்ததும் சந்தியா செய்த வேலையால் மொத்த குடும்பமும் அதிர்ச்சி அடைந்துள்ளது.

விஜய்டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் தான் ராஜா ராணி-2.இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கப்போகின்றது என்பதை பார்ப்போம்...

 கௌரி மேடம் சந்தியாவை ரூமுக்கு அழைக்க  ரூமுக்கு வரும் சந்தியாவுக்கு அவர் லீவு கொடுக்க சந்தியா இன்ப அதிர்ச்சி அடைகிறார். ஆனால் இரண்டு நாள் எல்லாம் லீவ் தர முடியாது ஒரே நாள்தான் லீவு தர முடியும் என சொல்ல சந்தியா சரி என ஏற்றுக்கொள்கிறாள்.



அடுத்து மறுநாள் காலையில் சிவகாமி வீட்டில் குழந்தைக்கு பெயர் வைக்க ஏற்பாடுகள் தடபுடலாக நடக்க சந்தியா ஆட்டோவில் வந்து கொண்டிருக்க சரவணன் போன் செய்ய நாட் ரீச்சபிள் என வருகிறது. இதனால் சந்தியா ஃபங்ஷனுக்கு வருகிறாரா இல்லையா என்ற குழப்பத்தில் குடும்பத்தார் இருந்தனர்.

எனினும் இதனையடுத்து ஃபங்ஷன் ஆரம்பமாகி  நடைபெற யாரும் எதிர்பாராதவிதமாக சந்தியா ஆட்டோவில் வந்து இறங்க எல்லோரும் சந்தோஷப்படுகின்றனர். வீட்டுக்குள் வந்ததும் பக்கத்து வீட்டு குழந்தையை வாங்கிக் கொஞ்சம் சந்தியா அப்படியே அர்ச்சனாவ உரிச்சி வச்சிருக்கா என கூற வந்ததும் வராததும் ஏழரைய இழுக்கிறாளே போலீஸ் புத்தி என்றது சரியா போச்சு கரெக்ட்டா கண்டுபிடிச்சுட்டா என அர்ச்சனா ஷாக்கடைகின்றார்.

இதன் பிறகு சரவணன் அது பக்கத்து வீட்டு குழந்தை சரவணன் ஓட பையன் தொட்டிலில போட்டாச்சு என கூற  சந்தியா குழந்தையை அவர்களிடம் திருப்பிக் கொடுக்கிறார். இதன் பிறகு குழந்தைக்கு பெயர் வைக்கும் பங்க்ஷன் முடிந்ததும் சரவணன் சந்தியாவும் ரூமுக்குள் தனியாக மனதுக்குள் பேசிக் கொண்டிருக்கின்றனர்.



சந்தியா ஆசையாக பேச சரவணன் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க பிறகு சந்தியா முத்தம் கேட்டு கண்ணை மூட அவர் ஸ்வீட் எடுத்து ஊட்ட சந்தியா விரலை பிடித்து கடித்து விடுகின்றார். பின்னர் ஒரே ஒரு நாள் தான் லீவு கொடுத்தாங்க என நடந்துச்சு சந்தியா சொல்ல வர சரவணன் என்னாச்சு என கேட்க இத்துடன் இனிய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Advertisement

Advertisement

Advertisement