• Apr 20 2024

ராதிகாவுக்கு சவால் விட்டு வீட்டிற்கு கிளம்பிய இனியா‌‌.. கோபத்தில் கோபி எடுத்த முடிவு – இன்றைய முழு எபிசோட் அப்டேட்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கின்றது என்பதை பார்ப்போம்...

 இனியா ராதிகாவிடம் எங்க அப்பாவை இங்கிருந்து கூட்டிட்டு போயிடுவேன் என கூற எனக்கும் அவருக்கும் கல்யாணம் ஆயிடுச்சு, நடக்காத விஷயத்தை பத்தி எல்லாம் பேசாத என ராதிகா கூற அப்பாவுக்கு அம்மாவை தான் பிடிக்காது எங்களை பிடிக்கும் நான் கூட்டிட்டு தான் போவேன் என கூறி  தாத்தா வீட்டுக்கு போகலாமா அம்மாவ பாக்கணும் என சொல்கிறார். உங்க அப்பா இல்லாத போது அங்க போகாத அது தப்பு என ராதிகா கூற அப்படியே போவன் என்று  மட்டும் நினைக்காதீங்க திரும்பி வருவேன் எங்க அப்பாவோட தான் அந்த வீட்டுக்கு போவேன் என கூறிவிட்டு போகிறார்.



இனியா வீட்டுக்கு போக அவளை பார்த்ததும் எல்லோரும் ஓடி வந்து ஆசையாக பேச இனியா ஒரு வார்த்தை கூட பேசாமல் அப்படியே நிற்கிறார்.இதன்  பிறகு என்னோட துணி எடுத்துட்டு போக தான் வந்தேன் என கூறு எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர். அதன்பின்னர் இனியா ரூமுக்குச் சென்று அழுது கொண்டிருக்க அப்போது ஜெனி வர உடனே கண்ணீரைத் துடைத்துக் கொண்டு துணி எடுப்பது போல சமாளிக்கிறார்.


எழில் ரூமுக்கு வந்து இனியாவை போக வேண்டாமென சமாதானம் செய்ய நானும் எல்லோரையும் மிஸ் பண்றேன் ஆனா எனக்கு அம்மாவும் வேணும் அப்பாவும் வேணும் நான் டாடியோட இந்த வீட்டுக்கு வந்து விடுவேன் என கூற அவர் வர மாட்டாரு என எழில் சொல்ல வருவாரு நான் கூட்டிட்டு வருவேன் என இனியா உறுதியாக சொல்கிறார்.



மேலும் இந்தப் பக்கம் வீட்டுக்கு வரும் கோபி ராதிகாவுடன் நெருக்கமாக சென்று உட்கார இனியா வீட்ல இல்லை என்ன சொன்னதும் கோபி அதிர்ச்சி அடைகிறார். நான் வெளியே போனதும் சண்டை போட்டு அவங்கள அனுப்பிட்டியா என கோபி ராதிகாவிடம் கோபப்பட யாரு நான் சண்டை போட்டு அனுப்பிட்டனா இனியா நான் மட்டும் போக மாட்டேன் எங்க அப்பாவையும் கூட்டிட்டு போவேன் என்று என்கிட்ட சவால் விடுறா, உங்க டாடி இல்லாத போது அம்மாவை பார்க்க போகாத அது தப்புன்னு சொல்லி அவ கேட்காமல் போய் இருக்கா என்னை‌ என்ன பண்ண சொல்றீங்க என ராதிகா கோபப்பட்டு ரூமுக்குள் சென்று கதவை சாத்திக் கொள்ள கோபி அதிர்ச்சி அடைகிறார்.


அத்தோடு இந்த பக்கம் இனியா சூட்கேஸை தூக்கி கொண்டு கீழே வந்து எழில் இடம் மட்டும் நான் போறேன் என கூறி தாத்தா போகலாம் என சொல்ல பாக்கியா கலங்கி நிற்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Advertisement

Advertisement

Advertisement