• May 05 2024

ரம்பாவும் குஷ்பூவும் இந்தளவுக்கு நல்ல நண்பர்களா..? என்ன பண்ணி இருக்காங்க தெரியுமா..? கண்ணே பட்டிடும் போல இருக்கு..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

இந்தியத் திரையுலகில் தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம், பெங்காலி மற்றும் போஜ்புரி எனப் பல மொழிப் படங்களிலும் நடித்து கொடி கட்டிப் பறந்தவரே நடிகை ரம்பா. சினிமாவில் இவருக்கான ஒரு அறிமுகத்தைக் கொடுத்தது 'ஆ ஒக்கடு அடக்கு' என்ற தெலுங்குப் படமே. அதே போன்று தமிழ் சினிமாவிலும் 'உழவன்' என்ற படத்தின் மூலமாகவே காலடி எடுத்து வைத்திருந்தார்.

தொடர்ந்து விஜய், சூர்யா, அஜித், சத்யராஜ், முரளி எனப் பல முன்னணி ஹீரோக்களுடனும் நடித்து தனது நடிப்புத் திறமையை நிலை நாட்டினார். ரம்பாவின் படங்களுக்கு என்றே அந்தக் காலத்தில் ஒரு பெரிய ரசிகர் கூட்டமே இருந்தது.

இவ்வாறாக தொடர்ந்து படங்களில் ஓய்வில்லாமல் நடித்து வந்த ரம்பா சில காலங்களின் பின்னர் இலங்கை தமிழரான இந்திரன் பத்மநாதன் என்பவரை மணந்து கொண்டு கனடாவின் ரொறன்ரோவில் செட்டில் ஆனார். இவருக்கு தற்போது 3 பிள்ளைகளும் உள்ளனர். திருமண வாழ்க்கைக்குப் பின்னர் இவர் படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டார்.

இவரைப் போன்றே தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் அதிகளவு ரசிகர் கூட்டத்தை கொண்ட கனவுக் கன்னியாக வலம் வந்தவர் குஷ்பூ. ரம்பாவும் குஷ்பூவும் திரைப்படத்தில் இணைந்து நடித்த காலத்தில் இருந்தே நல்ல நண்பர்களாக இருந்து வருகின்றார்கள். இவர்கள் இருவரினதும் நடிப்பில் உருவான 'மின்சாரக் கண்ணா' திரைப்படம் இன்றும் நம்மால் மறக்க முடியாது.

இவ்வாறாக அன்று தொடக்கம் இன்று வரையும் நல்ல நண்பர்களாக இருந்து வருகின்ற இவர்கள் இருவரும் சமீபத்தில் தமது பிள்ளைகளுடன் ஒருவரை ஒருவர் சந்தித்து கட்டித் தழுவி இருக்கின்றார்கள். அதுமட்டுமன்றி பல புகைப்படங்களையும் எடுத்து இருக்கின்றார்கள். அப்புகைப்படங்களை இருவருமே தத்தமது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருக்கின்றார்கள்.

இதனைப் பார்த்த ரசிகர்கள் தமது லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வருவதோடு மட்டுமல்லாமல் இருவரின் நட்பையும் பாராட்டி கமெண்டுகளையும் தெறிக்க விட்டு வருகின்றார்கள்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement