• Apr 16 2024

பணக் கஷ்டத்தினால் சொந்த வீட்டை விற்ற பிரபல நடிகை…இவருக்கு வந்த சோதனை என்னவோ..?

Prema / 1 year ago

Advertisement

Listen News!

ஹாலிவுட் சினிமாவில் புகழ் பெற்ற முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ஜானி டெப். இவர் முதன் முதலாக 'எ நைட் மேர் இன் எல்ம் இசுட்ரீட்' என்ற திரைப்படத்தின் மூலமாகவே திரையுலகில் கால் பதித்தார். அதனைத் தொடர்ந்து 'ரம் டையரி, ஸ்வீனி டோட், சார்லி அண்ட் தி சாக்லேட் பேக்டரி' எனப் பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் புகழ்பெற்றார்.

இவர் நடித்த படங்களிலே அதிகளவு ரசிகர்களை பெற்றுத் தந்த படம் 'பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்' ஆகும். முக்கியமாக இவர் கேப்டன் ஜாக் ஸ்பேரோவாக இப்படத்தில் நடித்திருந்தார். இவ்வாறாக பல படங்களில் பிஸியாக நடித்து வந்த ஜானி டெப் ஏற்கனவே திருமணமாகி விவகாரத்தாகி இருந்தார்.

அதனைத் தொடர்ந்து ஜானி டெப் ஹாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வந்த ஆம்பர் ஹெர்டை கடந்த 2015-ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டு மறுபடியும் குடும்ப வாழ்க்கையில் இணைந்து கொண்டார்.

நடிகை ஆம்பர் ஹெர்ட் ஜானி டெப்பை விட 25 வயது இளையவர் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு ஆண்டுகள் நல்லபடியாக சென்ற இவர்களது திருமண வாழ்க்கை அந்த 2 ஆண்டுகள் மட்டுமே மகிழ்ச்சியுடன் நீடித்தது.

அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற சில கருத்து வேறுபாடுகளின் காரணமாக 2017 இல் இவர்கள் இருவரும் விவாகரத்து செய்து கொண்டார்கள். அதன்பின்னர் 2019 இல் பத்திரிக்கை ஒன்றிற்கு கட்டுரை எழுதியிருந்தார். ஆம்பர் ஹெர்ட் அந்த கட்டுரையில் ஜானி தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக சுட்டிக் காட்டியிருந்தார்.

இது திரையுலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பலரும் ஜானி டெப்பை பிரபலங்கள் பலரும் விமர்சிக்க ஆரம்பித்தனர். அதுமட்டுமன்றி வார்னர் ப்ரதர்ஸ் உள்ளிட்ட ஹாலிவுட் நிறுவனங்கள் ஜானி ஏற்கெனவே ஒப்பந்தமாகி இருந்த படங்களில் இருந்து அவரை விலக்கி வைக்கத் தொடங்கின. இதனால் அவருக்கு சினிமாவில் பட வாய்ப்புக்கள் குறைந்து செல்லத் தொடங்கின.

இதனால் கோபமடைந்த ஆம்பர் ஹெர்ட் தனது புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுவதாக ஜானி டெப் மீது நீதிமன்றத்தில் வழக்கு ஒண்றினைத் தொடர்ந்தார். அந்த வழக்கு விசாரணை போலிஸாரினால் பல கட்டங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது அந்த வழக்கினுடைய தீர்ப்பானது ஜானிக்கு சாதகமாக வந்துள்ளது.

அதுமட்டுமன்றி ஆம்பர் ஹெர்ட் க்கு பாதகமாகவும் அமைந்திருக்கின்றது. அதாவது இழப்பீடாக ஆம்பர் ஹெர்ட் 15 மில்லியன் டாலர்கள் ஜானி டெப்பிற்கு கொடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் ஜானி டெப்பிற்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய போது “ஆம்பர் ஹெர்ட் அந்த பணத்தைக் கட்டவில்லை என்றால் என்ன நடவடிக்கை எடுப்பீர்கள்” என்று கேட்டிருந்தார்.

மேலும் அவர் கூறுகையில் “அவர் மேல் முறையீடு செய்யவில்லை என்றால் டெப் அந்த பணத்தை வேண்டாம் எனக் கூட சொல்லலாம். நாங்கள் முன்பே சொன்னது போல இது பணம் சம்மந்தப்பட்ட விஷயம் இல்லை. நடிகர் ஜானி டெப்பின் இழந்த நற்பெயரை மீட்டெடுக்கும் விஷயம் சம்பந்தப்பட்டது” எனப் பதிலளித்துள்ளார்.

இவ்வாறாக ஆம்பர் ஹெர்ட் மீது அடிமேல் அடி விழுந்த நிலையில் இவர் கடுமையான பணக் கஷ்டத்திற்கு உள்ளாகியிருக்கின்றார். மேலும் தற்போது ஆம்பர் ஹெர்ட் கடுமையான பண நெருக்கடி காரணமாக கலிபோர்னியாவில் இருந்த தனக்கு சொந்தமான வீட்டை விற்றுவிட்டதாகவும் சினிமா தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதுமட்டுமன்றி இந்த வீட்டை அவர் இந்திய மதிப்பில் 7 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement