• Apr 19 2024

"பணம் இருக்கு என்பதுக்காகவே சில மூஞ்சிங்க நடிக்க வருதுங்க"…ஆயிரம் தான் இருந்தாலும் இப்பிடியா சொல்லுறது..? சர்ச்சைக்குள்ளான ராதாரவியின் பேச்சு..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தன்னுடைய வாழ்க்கைப் பயணத்தினை ஒரு நாடக நடிகராக ஆரம்பித்து தனது முயற்சியானாலும், கடின உழைப்பினாலும் சினிமா நடிகராக உயர்ந்து அங்கும் தனது பெயரினை நிலை நாட்டிய ஒருவரே நடிகர் ராதா ரவி.

இவர் சிறந்த நடிகராக மட்டுமல்லாது பா.ஜ கட்சியின் சிறந்த அரசியல் வாதியாகவும், நடிகர் சங்கத்தில் செயலாளர் பதவியிலும் இருந்திருக்கின்றார். 'மன்மத லீலை' என்ற படத்தின் மூலம் திரையுலகில் தோன்றி அதனைத் தொடர்ந்து இன்று வரை பல படங்களிலும் நடித்திருக்கின்றார். சினிமாவில் மட்டுமன்றி ஒரு சில தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொடர்களிலும் நடித்திருக்கின்றார்.

இவ்வாறாக ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் கொடி கட்டிப் பறந்து வந்த நடிகர் ராதா ரவி சமீபகாலமாக பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்து பல விதமான பேட்டிகளையும் கொடுத்து வருகின்றார். இந்த நிலையில் இவர் 'இரவின் நிழல்' திரைப்படத்தில் கலந்து கொண்டு பேசிய ஒரு விடயமானது தற்போது பலராலும் பேசப்பட்டு வருகின்றது.

அதாவது நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் இயக்கி, நடித்த 'இரவின் நிழல்' என்ற திரைப்படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இப்படத்தை அவர் சிங்கிள் ஷாட்டில் படமாக்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி உலகிலேயே நான் லீனியர் முறையில் சிங்கிள் ஷாட்டில் படமாக்கப்பட்ட முதல் திரைப்படம் என்ற பெருமையினையும் 'இரவின் நிழல்' பெற்றிருக்கின்றது.

இப்படம் வெளியான நாளிலிருந்து இன்றுவரை பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை ஏராளமானோர் இப்படத்தை பார்த்து வியந்து பார்த்திபனை பாராட்டி வருகின்றனர். அதிலும் குறிப்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சமீபத்தில் 'இரவின் நிழல்' திரைப்படத்தை பார்த்து விட்டு "பார்த்திபன் இப்படத்தின் மூலம் தான் ஒரு டெக்னாலஜி சீனியர் என்பதனை நிரூபித்து காட்டி விட்டார்" எனப் பாராட்டினார்.

இந்தநிலையில் இப்படத்தினுடைய சக்ஸஸ் மீற் சமீபத்தில் இடம்பெற்றிருந்தமை யாவரும் அறிந்ததே. இந்நிகழ்ச்சியில் பிரபல இயக்குநர்களான பாரதிராஜா, கே.எஸ்.ரவிக்குமார், அருண் மாதேஸ்வரன் போன்றோருடன், பிரபல தயாரிப்பாளர்கள் சிவா, தனஞ்செயன் மற்றும் நடிகர் ராதாரவி ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

மேற்குறித்த இந்நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ராதா ரவி பார்த்திபனின் முயற்சியை பலவாறாக பாராட்டிப் பேசியிருந்தார். மேலும் தொடர்ந்து அவர் பேசுகையில் “பார்த்திபன் மூஞ்சிய 2 மணிநேரம் தொடர்ந்து பார்க்க முடியுமா, ஆனா ஒத்த செருப்பு படத்துல பார்க்க வச்சான்ல, அதுதான் திறமை" எனப் புகழ்ந்து பேசியிருந்தார்.

அத்தோடு "இப்போலாம் பணம் இருக்கு என்பதற்காகவே சில மூஞ்சிங்க நடிக்க வர்றாங்க. நான் சாபம் விட்டாலே அப்படி ஆகிடுவாங்க போல. விளம்பரத்துல ஆடுறத பார்த்தப்பவே இவன் நடிக்க வந்துருவான்னு சொன்னேன் ஒரு மேடைல. அதே மாதிரியே வந்துட்டான்யா” எனவும் கிண்டலாகப் பேசி உள்ளார்.

இதைப் பார்த்த ரசிகர்கள் அவர் அதில் பேசியது கண்டிப்பாக லெஜண்ட் சரவணனைப் பற்றிதான் எனக் கூறி வருகின்றனர். அதுமட்டுமன்றி லெஜண்ட் ஹீரோவின் ரசிகர்கள் "ஒருவனோட வளர்ச்சியை பொறுக்காத சமூதாயம் இப்படித்தான் அவதூறாக பேசும்" என சரவணன் அருளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கமெண்ட் செய்து வருகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement