• May 21 2024

ஈஸ்வரியை ஒருமையில் பேசி அசிங்கப்படுத்திய ராதிகா- கோபியைப் பார்த்து பாக்கியா கேட்ட கேள்வி- ராதிகாவின் அண்ணா எடுத்த முடிவு

stella / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

ஈஸ்வரி, ராதிகா கிச்சனுக்கு வந்ததால் கோபம் தாங்க முடியாமல் பேச அவரது அம்மா வந்து கத்துகின்றார். அதற்கு ஈஸ்வரி இன்னொருத்தருடைய புருஷன் என்று தெரிஞ்சும் இவ கட்டிக் கிட்டு வந்தாலே மானம் கெட்டதானே இவ. ஒழுங்காவா கல்யாணம் பண்ணிட்டு வந்தா என்று கண்டபாட்டுக்குத் திட்டுகின்றார்.

அடையில் ராதிகாவின் அண்ணா ஈஸ்வரியை சமாதானப்படுத்தவும் ஈஸ்வரி உனக்கும் எதுவும் தெரியாதா தங்கச்சிக்கு இன்னொருத்திட புருஷனத்தான் கட்டி வைப்பியா உனக்கு வெட்கமா இல்லையா என்று திட்டுகின்றார். மேலும் ராதிகாவின் அம்மாவிடம் என்ன மிரட்டி மிரட்டியே காரியம் சாதிக்கலாம் என்று பார்க்கிறியா நீ எங்க வேணும் என்றாலும் போ எனக்கு பயமில்லை எனத் திட்டுகின்றார்.


இதனால் கடுப்பான ராதிகா ஏய் உனக்கு இவ்வளவு தான் மரியாதை இருக்க விரும்பினால் இருக்கலாம். இல்லை என்றால் வீட்டை விட்டு கிளம்பி போங்க என்று ஒருமையில பேச அனைவரும் அதிர்ச்சியடைகின்றார். ராதிகா ஒருமையில் பேசியதால் ஈஸ்வரி நெஞ்சுக்குள் ஏதோ செய்கின்றது என கதிரையில் உட்காருகின்றார்.

இதனால் பதறிப் போய் ஓடி வந்த பாக்கியா ராதிகாவைத் திட்டுகின்றார். இங்க நடப்பதைப் பார்க்க முடியாமல் ராதிகாவின் அண்ணா தனது அம்மாவையும் கூட்டிக் கொண்டு கிளம்புகின்றார். தொடர்ந்து எல்லோரும் கோபிக்காக காத்திருக்கும் போது கோபி வந்ததும் ராதிகா நடந்தது எல்லாத்தையும் சொல்கின்றார்.

இதனால் கடுப்பான பாக்கியா அத்தை பேசினதை மட்டும் சொல்லுறீங்களே நீங்க பண்ணினதை சொல்லலையே அத்தைய ஒருமைல பேசினது வீட்டை விட்டு போகச் சொன்னது எதையுமே சொல்லலையே என்று சொல்ல கோபி அதிர்ச்சியடைகின்றார். மேலும் கோபி இதைப் பற்றி எல்லாம் பேச நீ யாரு என்று கேட்ட போது நீங்க மகனா பேசியிருக்கோணும். அதான் நான் பேசுறேன் என்று சொல்கின்றார்.


தொடர்ந்து பாக்கியா பேச வர கோபி நீ வாயை மூடு என்று சொல்ல பாக்கியா நான் ஏன் வாயை மூடனும் இது என்னோட வீடு நான் பணம் குடுத்திருக்கிறேன் என்று சொல்ல கோபி இன்னும் 18 லட்சம் நீ தரணும் அது உன்னால தர முடியாது என்று சொல்ல ராதிகாவும் நக்கலாக இவங்களால எல்லாம் அது முடியாது என்று சொல்கின்றார்.

அப்போது பாக்கியா நான் 18 லட்சம் பணத்தைக் கொடுத்தா நீங்க என்ன பண்ணுவீங்க உங்க பொண்டாட்டியை கூட்டிட்டு இந்த வீட்டை விட்டு போய்டுவீங்களா என்று கேட்க கோபி பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிகின்றது.


Advertisement

Advertisement