• Sep 19 2024

கோபியால் மனம் மாறும் ராதிகா- பாக்கியாவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி – இன்றைய முழு எபிசோட்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி தொடர்.இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கப்போகின்றது என்பதை பார்ப்போம்...

எழில் பாக்கிய குறித்து பேசி அமிர்தாவிடம் வருத்தப்பட்டுக் கொண்டிருக்க இந்த பக்கம் செல்வி  நகையை அடகு வைத்து பணத்தை எடுத்து வந்து பாக்யாவிடம் கொடுக்க அவர் உடனடியாக ஸ்கூலுக்கு செல்கிறார். போகும்போது எழிலுக்கு போன் போட்டு பணம் கிடைத்து விட்டது நீ அலைய வேண்டாமென கூற எப்படி கிடைத்தது என கேட்க நீ வீட்டுக்கு வா முழு கதையையும் சொல்கிறேன் என சொல்கிறார்.

அடுத்ததாக கோபி ஸ்கூலில் இருந்து கிளம்ப எதிரே ராதிகா வருவதை பார்த்து அவரிடம் பேசுகிறார். மயு குறித்து நலம் விசாரித்துவிட்டு என்ன இந்த பக்கம் என கேட்க இப்போதைக்கு மும்பை போற விஷயம் தள்ளிப் போய் இருக்கு அதனால் அதுவரைக்கும் குழந்தையை ஸ்கூலுக்கு அனுப்பலாமா என கேட்க வந்தேன் என்று கூறுகிறார். நல்ல விஷயம் என கோபி கூற பிறகு ராதிகா உள்ளே பேச சொல்கிறார்.



இன்னொரு பக்கம் பாக்கியா ஸ்கூலுக்கு வந்து உள்ளே சென்று இனியா பெயர் சொல்லி பீஸ் கட்ட வேண்டுமென சொல்ல ஏற்கனவே கோபிநாத் கட்டி விட்டதாக சொல்ல பாக்யா ஷாக்கடைகின்றார். அடுத்ததாக இனியா மிகவும் பேச வேண்டும் என்று சொல்லி அவரை அழைத்து உங்க அப்பாவுக்கு நீ தான் வர சொல்லி பீஸ் கட்டினியா என்னை கேட்க நான் ஒன்னும் சொல்லல டாடியே வந்து கட்டிட்டாரு என இனியா கூறுகிறார். சரி நான் இங்கேயே வெயிட் பண்ணுகிறேன் நீ கிளாஸ் முடிச்சிட்டு வா  என கூற எனக்கு ஒன்னும் தேவையில்லை நீ போ ஸ்கூல் பேண்ட்ல வரேன் என இனியா உள்ளே சென்று விடுகிறார்.



அடுத்ததாக ராதிகா வெளிய வர கோபி அவளது கையைப் பிடித்துக் கொண்டு கெஞ்ச உனக்கு என்னிடம் வாழ ஆசை இருக்கா என கேட்க ராதிகா இருக்கு என தெரிவிக்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.


Advertisement

Advertisement