• Sep 17 2024

சேலையில் தகதகவென ஜொலிக்கும் ஆனந்தி... இப்பவும் 'கயல்' படத்தில் எப்படி இருந்தாங்களோ அப்படியே இருக்காங்களே..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகி குறுகிய காலத்திலேயே பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்ட ஒருவரே நடிகை ஆனந்தி.

இவர் இயக்குநர் பிரபுசாலமன் இயக்கத்தில் 2014-ஆம் ஆண்டில் வெளியான 'கயல்' என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர். இந்தப் படமானது அமோக வெற்றியை பெற்றிருந்தமையால் அன்றிலிருந்து அனைவராலும் 'கயல் ஆனந்தி' என்றே அழைக்கப்பட்டார். 


அறிமுகப் படத்திலேயே தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி இருந்தமையினால் தொடர்ந்து 'சண்டிவீரன், திரிஷா இல்லைனா நயன்தாரா, விசாரணை’, என வரிசையாக பல திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பினை பெற்றார்.

அந்த வகையில் ஆனந்திக்கு திரையுலகில் மிகப்பெரிய திருப்புமுனை ஏற்படுத்திய ஒன்று என்றால் அது 'பரியேறும் பெருமாள்’ என்ற திரைப்படம் தான். அதனைத் தொடர்ந்து இவர் நடித்த ’இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ படத்திலும் ஆனந்தியின் நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.


சினிமாவில் துளி அளவும் கவர்ச்சி காட்டாமல் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வரும் இவருக்கு, திடீரென 20121-ஆம் ஆண்டு இரகசிய திருமணம் நடந்து முடிந்தது.

அதாவது கடந்த 4 வருடங்களாக இணை இயக்குநர் சாக்ரடீஸை காதலித்து வந்தத நிலையில், இரு குடும்பத்தினரும் இவர்களது காதலுக்கு சம்மதம் தெரிவித்த பிறகே திருமணம் நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.


இந்த நிலையில் திருமணத்தை தொடர்ந்து இவரைப் பற்றிய தகவல்கள் பெரியளவில் ரசிகர்களுக்கு கிடைக்காத நிலையில் தற்போது இவரின் சமீபத்திய புகைப்படம் ஒன்று வெளியாகி இருக்கின்றது.


அதாவது தெலுங்கில் இடம்பெற்ற ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களே அவையாகும்.அதில் இவர் சாறி அணிந்து ரொம்பவே அழகாக காட்சி அளிக்கின்றார். இப்புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

Advertisement

Advertisement