• Apr 26 2024

ராவணன், PS 2-வில் மிரட்டிய விக்ரம்-ஐஸ்வர்யா ராய்... மூன்றாவது கூட்டணிக்கு ரெடியான மணிரத்னம்! வெளியான மாஸ் அப்டேட்..!

Jo / 11 months ago

Advertisement

Listen News!

மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் கடந்த மாதம் வெளியானது.இந்தப் படத்தில் விக்ரம் ஆதித்த கரிகாலன் கேரக்டரிலும், ஐஸ்வர்யா ராய் நந்தினியாகவும் நடித்திருந்தனர்.விக்ரம் - ஐஸ்வர்யா ராய் ஜோடி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றதால், மணிரத்னம் செம்ம மாஸ்ஸான ஐடியாவில் உள்ளாராம்.

அதன்படி விக்ரம் - ஐஸ்வர்யா ராய் நடிப்பில் மூன்றாவதாக ஒரு படம் இயக்க முடிவெடுத்துள்ளாராம்.

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம் - ஐஸ்வர்யா ராய்:மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவானது. கடந்தாண்டு முதல் பாகம் வெளியானதைத் தொடர்ந்து, பொன்னியின் செல்வன் 2 கடந்த ஏப்ரல் இறுதியில் ரிலீஸானது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பொன்னியின் செல்வன் 2 ரசிகர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை.அதேநேரம் சீயான் விக்ரம் - ஐஸ்வர்யா ராய் ஆகியோரின் நடிப்பை ரசிகர்கள் பயங்கரமாக பாராட்டினர். 

இரண்டாம் பாகம் முழுவதும் விக்ரம் தனது ஆதித்த கரிகாலன் கேரக்டரிலும், ஐஸ்வர்யா ராய் நந்தினி பாத்திரத்தில் மிரட்டியதாக கருத்து தெரிவித்திருந்தனர். விக்ரம் - ஐஸ்வர்யா ராய் இருவருக்குமான கெமிஸ்ட்ரி செம்மையாக ரீச் ஆகியிருந்தது.

ஐஸ்வர்யா ராய்யை பழி வாங்குவதற்காக கடம்பூர் கோட்டையில் விக்ரம் என்ட்ரியாகும் காட்சி சிலிர்க்க வைத்திருந்தது. அப்போது இருவருக்கும் இடையேயான வசனங்களும் கிளாஸிக்காக இருந்தது குறிப்பிடத்தக்கது. விக்ரம் - ஐஸ்வர்யா ராய் கெமிஸ்ட்ரியை பார்த்த ரசிகர்கள், இந்த ஜோடி மீண்டும் இணையுமா என கேட்டு வந்தனர். தற்போது இந்த கேள்விக்கு மணிரத்னம் பதில் கொடுக்க ரெடியாகிவிட்டாராம்.

அதன்படி, மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம் - ஐஸ்வர்யா ராய் இருவரும் மீண்டும் ஜோடியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது கமலின் KH 234 படத்தில் பிஸியாகிவிட்ட மணிரத்னம், அதன்பின்னர் விக்ரம் - ஐஸ்வர்யா ராய் படத்தை எடுக்கத் திட்டமிட்டுள்ளாராம். 

இதற்கான கதையை ரெடி செய்யும் பணிகளில் மணிரத்னம் பிஸியாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.முன்னதாக ராவணன் படத்தில் விக்ரம் - ஐஸ்வர்யா ராய் ஜோடி இணைந்து நடித்திருந்தனர். வீரா - ராகிணி காதலை பார்த்து ரசித்த ரசிகர்களுக்கு, ஆதித்த கரிகாலனும் நந்தினியும் அடுத்த ரொமாண்டிக் ட்ரீட் கொடுத்தனர். 

இதனால் மூன்றாவது முறையாக இந்த ஜோடியை வைத்து ஒரு கிளாசிக்கல் விருந்து கொடுக்க மணிரத்னம் விரும்புகிறாராம். முக்கியமாக ராவணன், பொன்னியின் செல்வன் படங்களில் விக்ரம் - ஐஸ்வர்யா ராய் ஜோடி பிரிந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement