• Sep 20 2024

வெளிநாட்டில் ஆண் ஒருவருடன் ஊர்சுத்தும் பிரியபாவனி-இவர் தான் அவரோ..கலாய்க்கும் ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் சினிமாவின் மோஸ்ட் வான்டட் நாயகி ஆகியிருக்கிறார் பிரியா பவானி சங்கர்.எனினும் தற்போது இவர், ருத்ரன், பத்து தல, அகிலன், இந்தியன் 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் ஆரம்பமாகி உள்ளது.

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமானவர்  நடிகை ப்ரியா பவானி சங்கர். விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை மெகாத்தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகி இதன் பின்னர், மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.

இதன் பின் கடைக்குட்டி சிங்கம் படத்தில் சிறிய வேடத்தில் நடித்தார். பின் எஸ்.ஜே சூர்யாவுடன் மான்ஸ்டர் படத்திலும், அருண் விஜய்யுடன் மாபியா படத்திலும் நடித்தார். கடைசியாக ஒ மணப்பெண்ணே, பிளட் மணி, ஹாஸ்டல் படங்களில் நடித்தார். 



எனினும் சமீபத்தில் இவர் நடிப்பில் குருதி ஆட்டம், யானை, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட பல படங்கள் வெளியாகின.மேலும்  இதில் திருச்சிற்றம்பலம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பது மட்டுமல்லாமல் அவ்வப்போது தனது புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பகிர்வதை வாடிக்கையாக கொண்டிருப்பவர் ப்ரியா பவானி சங்கர். 



அத்தோடு ராஜ் வேல் எனும் நபரை ப்ரியா பவானி சங்கர் காதலிப்பது அனைவரும் அறிந்த ஒன்றே. அவ்வப்போது காதலருடன் இருக்கும் புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பகிர்வதை வாடிக்கையாக கொண்டிருப்பவர் நடிகை  ப்ரியா பவானி சங்கர்.

இந்நிலையில், தனது காதலருடன் வெளிநாட்டுக்கு டூர் சென்ற பிரியா பவானி சங்கர் கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கும் மேலாக காதலருடன் ஊர் ஊராக சுற்றி வருகிறார். 



எனினும் தற்போது இவர் ஜெர்மனியில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் காதலருடன் வெளிநாடே கதியா இருக்கீங்களே..இந்தியா வர மனசே இல்லையா? என்று ரசிகர்கள் கலாய்த்தும் வருகிறார்கள்.

Advertisement

Advertisement