கன்னட திரையுலகில் கடந்த ஆண்டு வெளியாகி பயங்கர ஹிட் அடித்த திரைப்படம் 'காந்தாரா'. இப்படமானது வெறும் 16 கோடிக்கு உருவாகி 400 கோடி வசூலை ஈட்டி திரையுலகையே மிரட்டியது. அந்தவகையில் பஞ்சுருளி தெய்வத்தை மையமாக கொண்டு பூதகோல நடனமாடும் காட்டில் வாழும் வன மக்களின் கதையை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி இருந்தது.
இப்படத்தை கன்னட இயக்குநரும் நடிகருமான ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்திருந்தார். மேலும் இந்த திரைப்படம் ஆஸ்கர் போட்டி வரை சென்றமை நம் அனைவரும் அறிந்த ஒன்றே. காந்தாரா படத்தின் முதல் பாகம் வசூலில் ஹிட் அடித்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்த நிலையில் அதன் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் முயற்சியில் ரிஷப் ஷெட்டி தீவிரமாக மும்முரம் காட்டி வருகிறார்.
மேலும் காந்தாரா படம் தான் இரண்டாம் பாகம் என்றும் அதன் முதல் பாகத்தை தான் இப்போது உருவாக்கப் போகிறேன் எனவும் சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் கூறி உள்ளார். இதனைத் தொடர்ந்து சிவாவின் அப்பா கதாபாத்திரத்தின் கதையை ப்ரீக்வெலாக இயக்கப் போகிறாரா ரிஷப் ஷெட்டி என ரசிகர்கள் பலரும் எதிர்பார்ப்புகளை எகிற வைத்துள்ளனர்.
இந்நிலையில், காந்தாரா 2 படத்தின் கதாநாயகி குறித்த தகவல் வெளியாகி இருக்கின்றது. அந்தவகையில் பாலிவுட் நடிகை ஒருவரை ரிஷப் ஷெட்டி இறக்க உள்ளார். அதாவது ரிஷப் ஷெட்டி உடன் பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு காந்தாரா 2 லோடிங் என கேப்ஷன் கொடுத்து ரசிகர்களை மிகவும் உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளார்.
இதனைத் தொடர்ந்து காந்தாரா 2 படத்தில் ஊர்வசி ரவுத்தேலா தான் ஹீரோயினா என ரசிகர்கள் கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர். மேலும் பாலிவுட் கவர்ச்சி நடிகையான ஊர்வசி ரவுத்தேலா லெஜண்ட் சரவணன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'தி லெஜண்ட்' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் அந்த படம் அவருக்கு கோலிவுட்டில் எதிர்பார்த்தளவிற்கு வரவேற்பை கொடுக்கவில்லை. இதையடுத்து தெலுங்கு படத்தில் நடித்து வரும் ஊர்வசி ரவுத்தேலா தற்போது கன்னட படத்திலும் கமிட் ஆகி உள்ளார். இதனால் தமிழ் சினிமா ரசிகர்கள் "எல்லாம் அண்ணாச்சி வந்த நேரம்" என்று கூறி கிண்டலாக கமெண்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.
Listen News!