• Sep 20 2024

விமர்சகர்களிடம் மாட்டிக்கிட்டு தவிக்கும் பாக்கியலட்சுமி சீரியல் கோபி- என்ன கூறியிருக்கிறார் என்று பாருங்க

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பரபரப்பாகவும் சூப்பர் ஹிட்டாகவும் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் தான் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணியில் இருந்து வருகிறது.

அதாவது கணவன் தனது மனைவி அப்பாவி என்பதால் அவரைப் பல்வேறு விதமாக ஏமாற்றுகின்றார். இன்னொரு பெண்ணுடன் காதல் தொடர்பிலும் இருந்து வருகின்றார்.

அத்தோடு தனது குடும்பத்திடம் சிக்காமல் கோபி தொடர்ந்து தப்பி வருவதால் அவர் எப்போது சிக்குவார் என்பது தான் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் ஒரே எதிர்பார்ப்பு. அந்த வகையில் தற்பொழுது சில உண்மைகள் கசிய ஆரம்பித்துள்ளன.

இந்நிலையில் தற்போது கோபி கதாபாத்திரத்தில் நடித்து வரும் சதீஷ் அதிகம் வருத்தத்துடன் இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அவர் சீரியலில் நெகடிவ் ரோலில் நடிப்பதால் அவரை நிஜத்திலேயே அதிகம் பேர் திட்டுகிறார்கள்.

நல்லதா நடிச்சாலும் தப்பு நல்லா நடிக்கல என்றாலும் தப்பு கடவுள் சில விஷயங்கள் எனக்கு கொடுத்திருக்கிறார் அத வெளியில காண்பித்தாலும் தப்பு கோபி காரெக்டரில் நடித்தாலும் தப்பு எனக்கு எதுவும் புரிய ஏதோ என்னோட வேலைய ஒழுங்காக செய்கிறேன் என்ற நிம்மதி இருக்கு என்று மிகவும் வருத்தத்துடன் தெரிவித்திருக்கின்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement