• Sep 18 2024

தனது காதல் மனைவியை பிரிந்தார் ஜெயம் ரவி.. அதிகார்வபூர்வமாக வெளியான அறிவிப்பு

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் ஜெயம் ரவி, கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் நடித்து வருகிறார். இவர்  நடிப்பில் இறுதியாக வெளியான சைரன் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. அதன்பின் தற்போது பிரதர் படத்தில் நடித்து வருகிறார்.

2009 ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஜெயம் ரவி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அதில் ஒரு மகன் ஜெயம் ரவி நடித்த டிக் டிக் டிக் படத்தில் நடித்திருந்தார். இந்த படமும் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

சமீப காலமாகவே ஜெயம் ரவி தனது மனைவியை விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தியும் தனது இன்ஸ்டா பக்கத்தில் ரவி உள்ள புகைப்படங்கள் அத்தனையையும் டெலிட் செய்தார்.


இதனால் ரசிகர்கள் மத்தியில் மட்டும் இல்லாமல் தமிழ் திரை உலகினர் மத்தியிலும் பல்வேறு பேச்சுக்களை எழுந்தன. அதிலும் ஆர்த்தியின் அம்மா தான் இதற்கெல்லாம் காரணம் என்றும், ஜெயம்ரவி எந்த படத்தில் நடிக்க வேண்டும் எந்த படத்தில் நடிக்க கூடாது என்ற முடிவை அவர் எடுப்பதாகவும் இதன் காரணத்தினாலே அவர்களுக்கு இடையில் பிரச்சனை வந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில், நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை  அதிகாரபூர்வமாக பிரிந்துள்ளதாக தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் சினிமா நட்சத்திரங்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஏற்கனவே தனுஷ் - ஐஸ்வர்யா மற்றும் ஜிவி பிரகாஷ் - சைந்தவி ஆகியோர் விவாகரத்து பெற்று பிரிந்த நிலையில் தற்போது ஜெயம் ரவியும் தனது மனைவி பிரிந்து உள்ளார்.


Advertisement

Advertisement