• Jun 30 2025

இனியாவை வெளுத்து வாங்கிய நிதீஷ்.! கோபியின் வார்த்தையால் ஷாக்கான பாக்கியா.!

subiththira / 4 hours ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, பாக்கியா அந்தப் போட்டியில கலந்து கொள்ளுறதில நம்பிக்கை இல்ல என்று சொல்லுறார். அதுக்கு இனியா எல்லாம் நல்ல படியா நடக்கும் நீங்க தைரியமா இருங்க என்கிறார். மேலும் தோத்தாலும் பரவாயில்ல அதில கலந்து கொள்ளுங்க என்று சொல்லுறார். இதனை அடுத்து ஈஸ்வரிக்கு பாக்கியா வீட்டில சாப்பாடு செய்து கொடுக்கிறார்.


பின் கோபி பாக்கியாவப் பாத்து உன்னோட அம்மா எப்புடி இருக்காங்க என்று கேட்கிறார். அதைக் கேட்டு பாக்கியா ஷாக் ஆகுறார். இதனை தொடர்ந்து அவங்க நல்லா இருக்காங்க நான் daily அவங்களோட கதைக்கிறனான் என்று சொல்லுறார். பின் கோபி அவங்களுக்கு ஏதும் ஹெல்ப் தேவையென்றால் என்னட்ட கேட்கச் சொல்லுறார் கோபி.

அதனை அடுத்து ஈஸ்வரி பாக்கியாவப் பாத்து கோபி உன்மேல அக்கறையா நடந்து கொள்ளுறது உனக்கு சந்தோசமா இருக்கா என்று கேட்கிறார். அதுக்கு பாக்கியா ஒரு காலத்தில அவர் என்மேல அக்கறை காட்டோணும் என்று நினைச்சனான் தான் ஆனா இப்ப அப்புடி எல்லாம் இல்ல என்று சொல்லுறார். பின் ஈஸ்வரி பாக்கியாவப் பாத்து உனக்குனு யாரும் தேவையில்லையா என்று கேட்கிறார். 


அதுக்கு பாக்கியா எனக்கு யாரும் தேவையில்ல என்று சொல்லுறார். இதனை அடுத்து பாக்கியா இனியாட்ட போன் எடுத்து கோபி இப்புடி எல்லாம் என்னட கேட்டிருக்கிறார் என்று சொல்லுறார். அதைக் கேட்ட இனியா டாடி திருந்திட்டார் என்கிறார். பின் நிதீஷ் போதை பாவிச்சிட்டு வந்து இனியாவை தள்ளிவிடுறார். அதைப் பார்த்த சுதாகர் நிதீஷுக்கு பேசுறார். இதுதான் இன்றைய எபிசொட்.

Advertisement

Advertisement